"என் மகள் லவ் ஜிகாத்தால் தான் தற்கொலை செய்து கொண்டார்" : நடவடிக்கை எடுக்கக்கோரி கோவையில் தந்தை குற்றச்சாட்டு

கோவை : குனியமுத்தூர் அருகே லவ் ஜிகாத் காரணமாக இந்து பெண் தற்கொலை அஎய்து நடவடிக்கை எடுக்கக் கோரி பெண்ணின் தந்தை மனு கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.


கோவை : குனியமுத்தூர் அருகே லவ் ஜிகாத் காரணமாக இந்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி பெண்ணின் தந்தை மனு கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.



கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்கும் போது தற்கொலை செய்து கொண்ட அஸ்வினியின் தந்தை கங்காதரனுடன், அவரது மகன் நிதுன் மற்றும் இந்து முன்னணி வழக்கறிஞர் ஶ்ரீதர் மூர்த்தி, இந்து முன்னணி நிர்வாகி குணா ஆகியோர் இருந்தனர். பின்னர், அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது, அவர்கள் பேசியதாவது :- ஶ்ரீ நாராயண குரு கல்லூரியில் பி. காம். முதலாம் ஆண்டு எனது மகள் அஸ்வினி கங்கா படித்து வந்தார். கடந்த ஏப்ரல் 25-ம் தேதி லவ் ஜிகாத்தினால் தற்கொலை செய்து கொண்டார். அதே கல்லூரியில் பயின்று வந்த ஜாஃபர் என்ற இஸ்லாமிய மாணவர், எனது மகளை தொடர்ந்து மதமாற்றம் செய்யக் கோரி அழுத்தம் கொடுத்து வந்துள்ளார். நாங்கள் யாரும் இல்லாத போது, எங்களது வீட்டிற்கு வந்த அந்த மாணவன், அஸ்வினிக்கு தொந்தரவு கொடுத்து, அவரது படுக்கையறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொள்ள காரணமாக இருந்தார்.



மேலும், இது தொடர்பாக குனியமுத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது, காவல் ஆணையர் லவ் ஜிகாத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், லவ் ஜிகாத்தில் ஈடுபடும் இஸ்லாமிய இளைஞர்கள் மீது உரிய நட்வடிக்கை எடுக்க வேண்டும், எனக் கூறினர். இதனிடையே, கோவையில் லவ் ஜிகாத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க காவல்துறை ஆர்வம் காட்டவில்லை என்றும், இனி வரும் காலங்களில் இதனை தடுத்து நிறுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறிய அஸ்வினியின் தந்தை கங்காதரன் மற்றும் சகோதரர் நிதுன், ஜாஃபரை கைது செய்ய வேண்டும் என காவல் ஆணையரிடம் கோரிக்கை விடுத்தனர்.



இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது :- அஸ்வினியின் தந்தையுடன் இணைந்த இந்து அமைப்புகள் இதனை மத ரீதியிலான பிரச்சனையாக மாற்றுகின்றனர். விசாரணை முழு அளவில் நடந்து வருவதால், மாணவியின் தற்கொலைக்கான காரணம் விரைவில் தெரிய வரும், என்றனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...