கோவை : வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ. 4.60 லட்சம் மோசடி செய்த நபரை கோவை மாநகர குற்றப்பிரிவு கைது செய்தனர்.
கோவை : வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ. 4.60 லட்சம் மோசடி செய்த நபரை கோவை மாநகர குற்றப்பிரிவு கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் பொம்மன்ன செட்டிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் டி. ஜானகி ராமன். இவருக்கு அதே ஊரைச் சேர்ந்த விஷ்ணு பிரியா என்பவரின் மூலம் கோவையை சேர்ந்த மார்கோஸ் நவமணி என்பதுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சரவணம்பட்டியில் உள்ள மார்கோஸ் நவமணியின் அலுவலகத்திற்கு வந்த ஜானகி ராமன், வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதற்காக, பாஸ்போர்ட் மற்றும் தவணை முறையில் ரூ.1,90,000-ஐ கொடுத்துள்ளார். இதேபோல, ஜானகிராமனுடன் சேர்த்து நண்பர்கள் 5 பேரும் வெளிநாட்டு வேலைக்காக ரூ. 4,60,000 கொடுத்துள்ளனர். பணத்தைப் பெற்ட்திக் கொண்ட மார்கோஸ், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர்கள், தங்களது பாஸ்போர்ட் மற்றும் பணத்தையும் பெற்றுத் தரக்கோரி கோவை மாநகர குற்றப் பிரிவில் கடந்த ஜனவரி 19-ம் தேதி புகார் அளிக்கப்பட்டதன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, மார்கோஸ் தலைமறைவானார். இந்த நிலையில், அவரை போலீசார் இன்று கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் பொம்மன்ன செட்டிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் டி. ஜானகி ராமன். இவருக்கு அதே ஊரைச் சேர்ந்த விஷ்ணு பிரியா என்பவரின் மூலம் கோவையை சேர்ந்த மார்கோஸ் நவமணி என்பதுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சரவணம்பட்டியில் உள்ள மார்கோஸ் நவமணியின் அலுவலகத்திற்கு வந்த ஜானகி ராமன், வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதற்காக, பாஸ்போர்ட் மற்றும் தவணை முறையில் ரூ.1,90,000-ஐ கொடுத்துள்ளார். இதேபோல, ஜானகிராமனுடன் சேர்த்து நண்பர்கள் 5 பேரும் வெளிநாட்டு வேலைக்காக ரூ. 4,60,000 கொடுத்துள்ளனர். பணத்தைப் பெற்ட்திக் கொண்ட மார்கோஸ், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர்கள், தங்களது பாஸ்போர்ட் மற்றும் பணத்தையும் பெற்றுத் தரக்கோரி கோவை மாநகர குற்றப் பிரிவில் கடந்த ஜனவரி 19-ம் தேதி புகார் அளிக்கப்பட்டதன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, மார்கோஸ் தலைமறைவானார். இந்த நிலையில், அவரை போலீசார் இன்று கைது செய்தனர்.