கோவை : உத்திரப்பிரதேசத்தில் வெயிலால் உயிரிழந்த 5 பேரின் உடல்கள் ரயில் மற்றும் விமானம் மூலம் கோவைக்கு கொண்டு வரப்பட்டது.
கோவை : உத்திரப்பிரதேசத்தில் வெயிலால் உயிரிழந்த 5 பேரின் உடல்கள் ரயில் மற்றும் விமானம் மூலம் கோவைக்கு கொண்டு வரப்பட்டது.

கோவை, நீலகிரி பகுதியைச் சேர்ந்தவர்கள் உத்திர பிரதேச மாநிலம் காசிக்கு ரயிலில் ஆன்மிகா சுற்றுலா சென்றுள்ளனர். காசிக்கு சென்று விட்டு திரும்பி வரும்போது, அங்கு நிலவிய கடும் வெயிலால் 5 பேர் உயிரிழந்தனர். அவர்கள் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த சுப்பையா, பாலகிருஷ்ணன், பச்சையப்பா கவுடர் மற்றும் கோவை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த கலாதேவி, தெய்வாணை என்பது தெரியவந்தது. இதையடுத்து, 5 பேரின் உடல்களும் கோவைக்கு எடுத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. பச்சையப்பா கவுடர் மற்றும் தெய்வாணை ஆகியோரின் உடல்கள் ரயில் மூலம் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மீதமுள்ள 3 பேரின் உடல்கள் டெல்லியில் இருந்து விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டது. விமானத்தில் வர வேண்டிய 3 பேரின் உடல்கள் அழுகி தூர்நாற்றம் வீசியதாகக் கூறி, விமானத்தில் இருந்து இறக்கப்பட்டது. இதனால், 3 பேரின் உடல்களும் கோவைக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், நேற்று மாலையே வர வேண்டிய உடல்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டது.

இதையடுத்து, நீலகிரி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததை அடுத்து, நேற்றிரவு 3 பேரின் உடல்கள் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டது. நள்ளிரவில் 3 பேரின் உடல்களும் கோவை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதேபோல, ரயிலில் அனுப்பி வைக்கப்பட்ட இருவரின் உடல்கள் திருவனந்தபுரம் விரைவு ரயிலில் இன்று காலை கோவை வந்தடைந்தது. இதையடுத்து, 5 பேரின் உடல்களும் அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.
