திருப்பூர் : பனியன் சார்ந்த கூலி தொழில்களின் ஜாப் வொர்க்குகளுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்களிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சைமா வலியுறுத்தியுள்ளது.
திருப்பூர் : பனியன் சார்ந்த கூலி தொழில்களின் ஜாப் வொர்க்குகளுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்களிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சைமா வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக சைமா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- 100 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பூர் பனியன் தொழிலில் 5 லட்சம் பேர் நேரடியாகவும், 3 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் பெரிய நிறுவனங்களிலிருந்து கட்டிங் செய்த பனியன், ஜட்டிகளை வாங்கி தைத்து, அதில் கிடைக்கும் கூலியை வைத்து ஏராளமான பெண்கள் குடும்பங்களை நடத்தி வருகின்றனர். பெரிய பெரிய நிறுவனங்களைப் போல இவர்களும் ஜி.எஸ்.டி. செலுத்த வேண்டும் என்ற உத்தரவால், அவர்கள் நிலைகுலைந்து போயுள்ளனர்.
மிகவும் வறட்சியான கிராமங்களில் உள்ள ஏழை மக்களுக்கு இந்த பனியன் தொழில் மிகப்பெரிய உதவியாக இருக்கிறது. ஆகவே, பனியன் சார்ந்த தொழில்களுக்கும், ஏழை விவசாய மக்களுக்கும் உதவியாக இருக்கும் பனியன் சார்ந்த ஜாப் வொர்க் பில்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். மேலும், கூலிக்கு தயார் செய்து கொடுக்கும் யூனிட்டுகளை நடத்துபவர்கள் அதிகம் படிக்காதவர்கள் என்பதால், ஜி.எஸ்.டி. வசூலித்துக் கட்டி கணக்கு வைக்க இயலாது. மேலும், வறட்சியான கிராமங்களில் இந்த பனியன் சார்ந்த ஜாப் வொர்க் செய்யும் கிராம மக்கள் ஓரளவிற்கு வேலை வாய்ப்பு பெறுகிறார்கள். எனவே, பனியன் சார்ந்த கூலி தொழில் பில்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்களிக்க வேண்டும், என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சைமா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- 100 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பூர் பனியன் தொழிலில் 5 லட்சம் பேர் நேரடியாகவும், 3 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் பெரிய நிறுவனங்களிலிருந்து கட்டிங் செய்த பனியன், ஜட்டிகளை வாங்கி தைத்து, அதில் கிடைக்கும் கூலியை வைத்து ஏராளமான பெண்கள் குடும்பங்களை நடத்தி வருகின்றனர். பெரிய பெரிய நிறுவனங்களைப் போல இவர்களும் ஜி.எஸ்.டி. செலுத்த வேண்டும் என்ற உத்தரவால், அவர்கள் நிலைகுலைந்து போயுள்ளனர்.
மிகவும் வறட்சியான கிராமங்களில் உள்ள ஏழை மக்களுக்கு இந்த பனியன் தொழில் மிகப்பெரிய உதவியாக இருக்கிறது. ஆகவே, பனியன் சார்ந்த தொழில்களுக்கும், ஏழை விவசாய மக்களுக்கும் உதவியாக இருக்கும் பனியன் சார்ந்த ஜாப் வொர்க் பில்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். மேலும், கூலிக்கு தயார் செய்து கொடுக்கும் யூனிட்டுகளை நடத்துபவர்கள் அதிகம் படிக்காதவர்கள் என்பதால், ஜி.எஸ்.டி. வசூலித்துக் கட்டி கணக்கு வைக்க இயலாது. மேலும், வறட்சியான கிராமங்களில் இந்த பனியன் சார்ந்த ஜாப் வொர்க் செய்யும் கிராம மக்கள் ஓரளவிற்கு வேலை வாய்ப்பு பெறுகிறார்கள். எனவே, பனியன் சார்ந்த கூலி தொழில் பில்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்களிக்க வேண்டும், என வலியுறுத்தப்பட்டுள்ளது.