கோவை விமானநிலைய விரிவாக்கப் பணிகளுக்காக கையகப்படுத்த முழு இடத்தையும் பயன்படுத்த மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

கோவை : கோவை விமானநிலைய விரிவாக்கப் பணிகளுக்காக 627 ஏக்கர் நிலங்களையும் பயன்படுத்த வேண்டும் என விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரியை சந்தித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வலியுறுத்தினார்.

கோவை : கோவை விமானநிலைய விரிவாக்கப் பணிகளுக்காக 627 ஏக்கர் நிலங்களையும் பயன்படுத்த வேண்டும் என விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரியை சந்தித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வலியுறுத்தினார். 

டெல்லியில் மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலன், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் நரேந்திரசிங் டோமரை, தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேற்று நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2018-19-ம் ஆண்டிற்கான அடிப்படை மானியம் ரூ. 876.93 கோடி, 2017-18-ம் ஆண்டிற்கான செயலாக்க மானியம் ரூ. 194.78 கோடி நிதியினை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பிரதம மந்திரியின் அனைவருக்குமான வீடு வழங்கும் திட்டத்தில் விடுபட்ட 8 லட்சம் பயனாளிகளை இணைக்க அனுமதி வழங்கவும் கோரிக்கை மனுவினை அளித்தார். 

இந்த சந்திப்பின் போது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு கூடுதல் தலைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் கா. பாஸ்கரன் இருந்தனர். 

இதே போல, மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரம் மற்றும் சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரியை சந்தித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சந்தித்து பேசினார். அப்போது, கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காகக் கையகப்படுத்த பணிகள் மேற்கொண்டுள்ள 627.89 ஏக்கர் நிலத்தை முழுமையும் பயன்படுத்தக் கோரிக்கை விடுத்தார். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...