சந்திராயன்-2 விண்கலம் வரும் ஜூலை மாதம் 15-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்துள்ளார்.
சந்திராயன்-2 விண்கலம் வரும் ஜூலை மாதம் 15-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்துள்ளார்.
சந்திராயன் 1 வெற்றியைத் தொடர்ந்து, நிலவை ஆய்வு செய்வதற்காக தயாரிக்கப்பட்டு வரும் சந்திராயன்-2 விண்கலத்தை உருவாக்கும் பணிகள் பெங்களூரு மாரத்தள்ளியில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தில் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளன.
இந்த நிலையில், இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களை சந்தித்த்தார். அப்போது, அவர் கூறியதாவது:- சந்திராயன்-2 விண்கலம் வரும் ஜூலை 15-ம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும். 3.8 டன் எடை கொண்ட இந்த விண்கலம், பி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படும். இந்த விண்கலத்தில் 13 வகையான அறிவியல் ஆய்வு கருவிகள் பொருத்தப்படும். செப்., 6ம் தேதி நிலவில் தரையிறங்கும். நிலவின் தென் பகுதியில் ஆய்வு பணிகளை மேற்கொள்ளப்படும், இவ்வாறு அவர் கூறினார்.
சந்திராயன் 1 வெற்றியைத் தொடர்ந்து, நிலவை ஆய்வு செய்வதற்காக தயாரிக்கப்பட்டு வரும் சந்திராயன்-2 விண்கலத்தை உருவாக்கும் பணிகள் பெங்களூரு மாரத்தள்ளியில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தில் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளன.
இந்த நிலையில், இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களை சந்தித்த்தார். அப்போது, அவர் கூறியதாவது:- சந்திராயன்-2 விண்கலம் வரும் ஜூலை 15-ம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும். 3.8 டன் எடை கொண்ட இந்த விண்கலம், பி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படும். இந்த விண்கலத்தில் 13 வகையான அறிவியல் ஆய்வு கருவிகள் பொருத்தப்படும். செப்., 6ம் தேதி நிலவில் தரையிறங்கும். நிலவின் தென் பகுதியில் ஆய்வு பணிகளை மேற்கொள்ளப்படும், இவ்வாறு அவர் கூறினார்.