கர்நாடகாவில் இறந்த குட்டி யானையின் சடலத்தைத் தூக்கிக் கொண்டு தாய் யானையுடன் சக யானைகளும் ஊர்வலமாகச் சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
கர்நாடகாவில் இறந்த குட்டி யானையின் சடலத்தைத் தூக்கிக் கொண்டு தாய் யானையுடன் சக யானைகளும் ஊர்வலமாகச் சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வனத்துறை அலுவலர் பிரவீன் கஸ்வான் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தாய் யானை ஒன்று இறந்த தனது குட்டி யானையை சோகத்துடன் தூக்கிக் கொண்டு சாலையைக் கடக்கிறது. அதன்பின் மற்ற யானைகள் கூட்டமாக பின்தொடர்ந்து வந்தன. சாலையைக் கடக்கும் போது தாய் யானையை தூக்கி வந்த குட்டியின் சடலத்தை சாலையில் போட்டபடி சிறிது நேரம் நின்றது.

பின்னர், பிற யானைகள், குட்டியைப் பிரிந்து வாடும் தாய் யானைக்கு ஆறுதல் கூறுவது போன்று அருகில் சென்று நின்றன. பின்னர், மீண்டும் குட்டியின் சடலத்தைத் தூக்கிக் கொண்ட தாய் யானை, மெதுவாக வனப்பகுதிக்குள் நுழைந்தது. அதனைத் தொடர்ந்து, பிற யானைகளும் சென்றன. இந்தக் காட்சிகள் பார்ப்போரை நெகிழச் செய்தது.

மேலும், இந்த வீடியோவை பதிவிட்ட போது, "குட்டி யானை இறந்த சோகத்தில் இருக்கும் யானைகளின் இறுதி ஊர்வலம். குட்டியை பிரியும் தவிப்பை தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் இந்த யானை குடும்பம்," எனக் குறிப்பிட்டிருந்தார். அதோடு, சிம்பன்ஸி, கொரில்லா போன்ற உயிரினங்களைத் தவிர்த்து யானைகளும் இறுதி ஊர்வலம் சென்றது ஆச்சரியத்தை அளிப்பதாக அவர் பதிவிட்டிருந்தார். அவரது இந்த பதிவுகளுக்கு ஏராளமான பொதுமக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வனத்துறை அலுவலர் பிரவீன் கஸ்வான் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தாய் யானை ஒன்று இறந்த தனது குட்டி யானையை சோகத்துடன் தூக்கிக் கொண்டு சாலையைக் கடக்கிறது. அதன்பின் மற்ற யானைகள் கூட்டமாக பின்தொடர்ந்து வந்தன. சாலையைக் கடக்கும் போது தாய் யானையை தூக்கி வந்த குட்டியின் சடலத்தை சாலையில் போட்டபடி சிறிது நேரம் நின்றது.

பின்னர், பிற யானைகள், குட்டியைப் பிரிந்து வாடும் தாய் யானைக்கு ஆறுதல் கூறுவது போன்று அருகில் சென்று நின்றன. பின்னர், மீண்டும் குட்டியின் சடலத்தைத் தூக்கிக் கொண்ட தாய் யானை, மெதுவாக வனப்பகுதிக்குள் நுழைந்தது. அதனைத் தொடர்ந்து, பிற யானைகளும் சென்றன. இந்தக் காட்சிகள் பார்ப்போரை நெகிழச் செய்தது.

மேலும், இந்த வீடியோவை பதிவிட்ட போது, "குட்டி யானை இறந்த சோகத்தில் இருக்கும் யானைகளின் இறுதி ஊர்வலம். குட்டியை பிரியும் தவிப்பை தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் இந்த யானை குடும்பம்," எனக் குறிப்பிட்டிருந்தார். அதோடு, சிம்பன்ஸி, கொரில்லா போன்ற உயிரினங்களைத் தவிர்த்து யானைகளும் இறுதி ஊர்வலம் சென்றது ஆச்சரியத்தை அளிப்பதாக அவர் பதிவிட்டிருந்தார். அவரது இந்த பதிவுகளுக்கு ஏராளமான பொதுமக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.