கோவையில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

கோவை : குழந்தை தொழிலாளர் நலத்துறை சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


கோவை : குழந்தை தொழிலாளர் நலத்துறை சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



குழந்தை தொழிலாளர் நலத்துறை, சமூக நலத்துறை, கல்வித்துறை சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்தப் பேரணியை, மாவட்ட வருவாய் அலுவலர் ராம துரைமுருகன் துவங்கி வைத்தார். 



14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அபாயகர தொழில்களில் வேலைக்கு அமர்த்தக்கூடாது என்றும், குழந்தை தொழிலாளர்கள், படிப்பை பாதியில் நிறுத்தியவர்களை, வேலையில் சேர்க்கக் கூடாது எனவும் அதிகாரிகள் கூறினர். மேலும், அது போன்றவர்களை குழந்தை தொழிலாளர் நலப்பள்ளி அல்லது பிற பள்ளிகளில் கல்வி பயில அனுமதிக்க வேண்டும் என்றும் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால் 20 ஆயிரம் ரூபாய் அபராதம், இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்க நேரிடும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். 



இந்தப் பேரணியில் 500-க்கும் மேற்பட்ட பல்வேறு கல்வி நிறுவன மாணவ, மாணவியர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணியில் கலந்து கொண்டனர்.



இதனிடையே, கோவை மாநகராட்சியின் பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் வளாகத்தில் குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழியினை மாநகராட்சி துணை ஆணையர் ச. பிரசன்னா ராமசாமி தலைமையில் அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் ஏற்றுக் கொண்டனர். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...