அனுமதி பெறாமல் இயக்கப்படும் ரேப்பிடோ வாகனங்களில் பயணம் செய்ய வேண்டாம் : பொதுமக்களுக்கு வேண்டுகோள்

கோவை : அரசு அனுமதி பெறாமல் இயக்கப்படும் ரேப்பிடோ இருசக்கர வாகனங்களில் பொதுமக்கள் பயணம் செய்ய வேண்டாம் என கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை : அரசு அனுமதி பெறாமல் இயக்கப்படும் ரேப்பிடோ இருசக்கர வாகனங்களில் பொதுமக்கள் பயணம் செய்ய வேண்டாம் என கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- கோவை மாவட்டத்தில் தனிநபர் இருசக்கர வாகனங்களின் ரேப்பிடோ என்கிற செயலி மூலம் முன்பதிவு செய்து பொதுமக்களை ஏற்றிக் கொண்டு வாடகை வாகனமாக இயக்கப்படுகிறது என்ற புகார் எழுந்து வந்தது. இதன் அடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவை சரகத்தின் இணைப் போக்குவரத்து ஆணையரின் உத்தரவின் பேரில் கோவை மாநகர வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் காவல் துறையுடன் இணைந்து ரேஸ்கோர்ஸ் சாலை, ரயில்வே சந்திப்பு, மகளிர் பாலிடெக்னிக், காந்திபுரம் ஆகிய இடங்களில் நின்று, ரேப்பிடோ செயலி மூலம் பதிவு செய்து இருசக்கர வாகனங்கள் வந்தவுடன் பறிமுதல் செய்யப்பட்டன. 

இதன்மூலம், 15 இருசக்கர வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவைகள் அனைத்தும் நீதிமன்றத்தில் உரிய அபராதத் தொகை வசூலித்த பின்பே வாகனங்கள் விடுவிக்கப்படும். இதற்கு முன்பாக, இருகட்டங்களில் சுமார் 62 வாகனங்கள் இதே குற்றத்திற்காக சிறைபிடிக்கப்பட்டு, உரிய அபராதத் தொகை நீதிமன்றத்தில் செலுத்திய ரசீதுடன் வந்த பின்பே விடுவிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும், அரசு அனுமதி பெறாமல் இயக்கப்படும் இத்தகைய இருசக்கர வாகனங்களில் பொதுமக்கள் பயணம் செய்ய வேண்டாம், இவ்வாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...