இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் : கோவையில் 7 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

கோவை : இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கோவையில் 7 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை : இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கோவையில் 7 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கையில் கடந்த ஈஸ்டர் அன்று தேவாலயங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த குண்டுவெடிப்பில் பல உயிர்கள் பலியாகிய சம்பவம் உலக அரங்கை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து, சர்வதேச நாடுகள் தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்ற முயற்சியில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும், இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டவர்கள் யார் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என பல விசாரணைகளும் நடைபெற்றது. இதில், இந்த குண்டுவெடிப்புக்கும் கோவையில் உள்ள சில இளைஞர்களுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி இன்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை மாவட்டத்தில் உள்ள உக்கடம் அன்புநகர், குனியமுத்தூர், போத்தனூர் உள்ளிட்ட 7 இடங்களில் குறிப்பிட்ட சில இளைஞர்கள் வீடுகளை சோதனையிட்டு வருகின்றனர். அதேபோல, சமூகவலைதளங்களில் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்களுடன் தொடர்பு கொண்டுள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணை நடை பெற்று வருகிறது. தற்போது நடந்து வரும் விசாரணையில், இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவங்களில் ஈடுப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படங்கள் காண்பிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

மேலும், சோதனை நடைபெற்று வரும் அனைத்து வீடுகளிலும் கடந்த ஆறு மாத காலமாக நடைபெற்ற ஆவணங்கள், வங்கி கணக்கு, பாஸ்போர்ட், தொலைபேசி இணைப்பு போன்றவை குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையை கேரளாவில் உள்ள தேசிய புலனாய்வு முகமை பிரிவைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையானது 7 டி.எஸ்.பி.க்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையை அடுத்து கோவையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...