கோவை : கோவையில் நேற்று மாலை சட்டவிரோதமாக சீட்டு விளையாண்ட 20 பேரை மாவட்ட காவல்துறையினர் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கோவை : கோவையில் நேற்று மாலை சட்டவிரோதமாக சீட்டு விளையாண்ட 20 பேரை மாவட்ட காவல்துறையினர் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டத்தில் பெருகி வரும் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறார். இப்படி மாவட்டம் முழுவதும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை, 3 நம்பர் லாட்டரி விற்பனை போன்ற பல்வேறு நடவடிக்கைகள் தனிப்படை கொண்டு தடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல, மாவட்டம் முழுவதும் உள்ள 16 சோதனை சாவடிகளில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்து வந்தவர்கள், காவல் நிலைய பிணையில் விடப்பட்டு வந்ததை ஒழித்து, குற்றத்தை தடுக்கிம் வகையில் சிறைப்படுத்த வழிவகை கையாளப்பட்டு வருகிறது. இப்படி இதுவரை கோவை மாவட்டம் முழுவதும் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், துடியலூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக சீட்டு விளையாண்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று மாலை சிவாஜி காலனியில் உள்ள குடோனில் உள்ளே நுழைந்த போலீசார் சட்டவிரோதமாக சீட்டு விளையாண்ட 20 பேரை கைது செய்தனர். இதில், போலீசார் விமல் குமார், விஜயகுமார், விக்னேஷ், வைரவேல், கமல் குமார் உள்ளிட்ட 20 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 64,780 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இப்படி தினமும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்து மாவட்ட காவல் துறை நடவடிக்கைகள் எடுத்து வருவது பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றுள்ளது.
கோவை மாவட்டத்தில் பெருகி வரும் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறார். இப்படி மாவட்டம் முழுவதும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை, 3 நம்பர் லாட்டரி விற்பனை போன்ற பல்வேறு நடவடிக்கைகள் தனிப்படை கொண்டு தடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல, மாவட்டம் முழுவதும் உள்ள 16 சோதனை சாவடிகளில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்து வந்தவர்கள், காவல் நிலைய பிணையில் விடப்பட்டு வந்ததை ஒழித்து, குற்றத்தை தடுக்கிம் வகையில் சிறைப்படுத்த வழிவகை கையாளப்பட்டு வருகிறது. இப்படி இதுவரை கோவை மாவட்டம் முழுவதும் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், துடியலூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக சீட்டு விளையாண்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று மாலை சிவாஜி காலனியில் உள்ள குடோனில் உள்ளே நுழைந்த போலீசார் சட்டவிரோதமாக சீட்டு விளையாண்ட 20 பேரை கைது செய்தனர். இதில், போலீசார் விமல் குமார், விஜயகுமார், விக்னேஷ், வைரவேல், கமல் குமார் உள்ளிட்ட 20 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 64,780 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இப்படி தினமும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்து மாவட்ட காவல் துறை நடவடிக்கைகள் எடுத்து வருவது பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றுள்ளது.