கோவை : மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் காவிரி நதிநீர் துனை ஒழுங்காற்று குழுவினர் தண்ணீர் வெளியேற்றம் குறித்து ஆய்வு நடத்தினர்.
கோவை : மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் காவிரி நதிநீர் துனை ஒழுங்காற்று குழுவினர் தண்ணீர் வெளியேற்றம் குறித்து ஆய்வு நடத்தினர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் காவிரி ஆற்றின் கிளை ஆறான பவானி ஆறு ஓடி வருகிறது. ஆண்டுதோறும் வற்றாமல் ஓடி வரும் இந்த ஆற்றுநீரினை ஆதாரமாகக் கொண்டு பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைவதுடன் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. இந்த நிலையில், அண்மையில் டெல்லியில் காவிரி ஆணையத்தின் கூட்டமானது நடைபெற்றது. இதில், காவிரி நதிநீரை பங்கிடும் மாநிலமான தமிழகம், கர்நாடகா,கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று பங்கீடு குறித்து உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்து புகார் கூறினர். இதனையடுத்து, காவிரி ஒழுங்காற்று குழு தனது துணை குழு தலைமையில் சம்பந்தபட்ட மூன்று மாநிலங்களில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் தண்ணீர் வரத்து மற்றும் வெளியேற்றம் குறித்து அறிக்கை தயாரித்து அனுப்ப உத்தரவிட்டது. இதன்படி, சம்பந்தபட்ட நான்கு மாநிலங்களின் மத்திய நீர்வள அதிகாரிகள் கண்காணிப்பு துணை குழுவின் பொறியாளரான மோகன் முரளி தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு, காவிரி மற்றும் அதில் கலக்கும் துணை ஆறுகளின் தண்ணீர் வெளியேற்றம் குறித்து ஆய்வு நடத்தி வருகிறது. நேற்று காவிரி ஆறு ஓடும் பகுதிகளான கர்நாடகாவிலும் தமிழகத்தின் பிலிகுண்டு மற்றும் மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது.

இந்த நிலையில், இன்று மேட்டுப்பாளையம் வழியாக ஓடி காவிரியில் சங்கமிக்கும் பவானி ஆற்றில் காவிரி ஓழுங்காற்று துணை குழு நான்கு இடங்களில் ஆய்வு செய்தது. பவானி சாகர் அனையில் துவங்கி மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டி வரை ஆய்வு மேற்கொண்ட இந்த குழு, நீர்வரத்தினை ஆற்றில் இறங்கி பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அந்த குழுவினர், “காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவின் பேரில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் தண்ணீர் வரத்து மற்றும் வெளியேற்றம் ஆகியவற்றை இந்த குழு சென்னை மற்றும் பெங்களூரு பகுதியில் உள்ள அலுவலங்களில் இருந்தே தெரிந்துகொள்ளவதுடன், டிஜிட்டல் முறையில் கருவிகளை ஆறுகளில் பொறுத்தி கண்காணிக்க திட்டமிடப்பட்டிருக்கிறோம். அவற்றின் விபரங்களை இணையதளத்தில் பதிவிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இது குறித்து மூன்று மாநிலங்களை சேர்ந்த மத்திய நீர்வள அதிகாரிகளும் கூடி இந்த ஆய்வு நடத்திவரும் நிலையில், ஆய்வுக்கு பின் இது குறித்து விரைவில் மத்திய அரசிடம் அறிக்கை அளிக்கப்படும்,” என தெரிவித்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் காவிரி ஆற்றின் கிளை ஆறான பவானி ஆறு ஓடி வருகிறது. ஆண்டுதோறும் வற்றாமல் ஓடி வரும் இந்த ஆற்றுநீரினை ஆதாரமாகக் கொண்டு பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைவதுடன் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. இந்த நிலையில், அண்மையில் டெல்லியில் காவிரி ஆணையத்தின் கூட்டமானது நடைபெற்றது. இதில், காவிரி நதிநீரை பங்கிடும் மாநிலமான தமிழகம், கர்நாடகா,கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று பங்கீடு குறித்து உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்து புகார் கூறினர். இதனையடுத்து, காவிரி ஒழுங்காற்று குழு தனது துணை குழு தலைமையில் சம்பந்தபட்ட மூன்று மாநிலங்களில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் தண்ணீர் வரத்து மற்றும் வெளியேற்றம் குறித்து அறிக்கை தயாரித்து அனுப்ப உத்தரவிட்டது. இதன்படி, சம்பந்தபட்ட நான்கு மாநிலங்களின் மத்திய நீர்வள அதிகாரிகள் கண்காணிப்பு துணை குழுவின் பொறியாளரான மோகன் முரளி தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு, காவிரி மற்றும் அதில் கலக்கும் துணை ஆறுகளின் தண்ணீர் வெளியேற்றம் குறித்து ஆய்வு நடத்தி வருகிறது. நேற்று காவிரி ஆறு ஓடும் பகுதிகளான கர்நாடகாவிலும் தமிழகத்தின் பிலிகுண்டு மற்றும் மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது.

இந்த நிலையில், இன்று மேட்டுப்பாளையம் வழியாக ஓடி காவிரியில் சங்கமிக்கும் பவானி ஆற்றில் காவிரி ஓழுங்காற்று துணை குழு நான்கு இடங்களில் ஆய்வு செய்தது. பவானி சாகர் அனையில் துவங்கி மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டி வரை ஆய்வு மேற்கொண்ட இந்த குழு, நீர்வரத்தினை ஆற்றில் இறங்கி பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அந்த குழுவினர், “காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவின் பேரில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் தண்ணீர் வரத்து மற்றும் வெளியேற்றம் ஆகியவற்றை இந்த குழு சென்னை மற்றும் பெங்களூரு பகுதியில் உள்ள அலுவலங்களில் இருந்தே தெரிந்துகொள்ளவதுடன், டிஜிட்டல் முறையில் கருவிகளை ஆறுகளில் பொறுத்தி கண்காணிக்க திட்டமிடப்பட்டிருக்கிறோம். அவற்றின் விபரங்களை இணையதளத்தில் பதிவிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இது குறித்து மூன்று மாநிலங்களை சேர்ந்த மத்திய நீர்வள அதிகாரிகளும் கூடி இந்த ஆய்வு நடத்திவரும் நிலையில், ஆய்வுக்கு பின் இது குறித்து விரைவில் மத்திய அரசிடம் அறிக்கை அளிக்கப்படும்,” என தெரிவித்தனர்.