கோவை : உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு சிங்காநல்லூர் குளப்பகுதியில் அதிவிரைவு படையினர் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.
கோவை : உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு சிங்காநல்லூர் குளப்பகுதியில் அதிவிரைவு படையினர் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சிங்காநல்லூர் குளப்பகுதியில் கடந்த 5-ம் தேதி மரக்கன்றுகளை நடவு செய்யும் திட்டத்தை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஸ்ரவன் குமார் ஜடாவத் தொடங்கி வைத்தார். இந்த நிலையில், இதன் ஒரு பகுதியாக, குயிப் அமைப்பு மற்றும் 105 பட்டாலியன் அதிவிரைவு படையினர் சார்பில் குளப்பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணி இன்று நடைபெற்றது. 100 வகையான 600-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இந்த்க மரக்கன்றுகளை குயிப் அமைப்பினர் நாள்தோறும் பராமரிக்க உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில், 105 பட்டாலியன் அதிவிரைவு படையின் துணை கமாண்டெண்ட் ராஜேஷ் தொர்கா, உதவி கமாண்டெண்ட் ஹரிகிருஷ்ணன் மற்றும் குயிப் அமைப்பின் பல்வேறு உறுப்பினர்கள கலந்து கொண்டனர்.

உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சிங்காநல்லூர் குளப்பகுதியில் கடந்த 5-ம் தேதி மரக்கன்றுகளை நடவு செய்யும் திட்டத்தை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஸ்ரவன் குமார் ஜடாவத் தொடங்கி வைத்தார். இந்த நிலையில், இதன் ஒரு பகுதியாக, குயிப் அமைப்பு மற்றும் 105 பட்டாலியன் அதிவிரைவு படையினர் சார்பில் குளப்பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணி இன்று நடைபெற்றது. 100 வகையான 600-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இந்த்க மரக்கன்றுகளை குயிப் அமைப்பினர் நாள்தோறும் பராமரிக்க உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில், 105 பட்டாலியன் அதிவிரைவு படையின் துணை கமாண்டெண்ட் ராஜேஷ் தொர்கா, உதவி கமாண்டெண்ட் ஹரிகிருஷ்ணன் மற்றும் குயிப் அமைப்பின் பல்வேறு உறுப்பினர்கள கலந்து கொண்டனர்.