ஸ்டாலினை வரவேற்க வந்த தொண்டர்கள் விமான நிலையத்தில் அதிக ஒலி எழுப்பியதால் பயணிகள் முகசுழிப்பு

கோவை : கோவை விமான நிலையத்திற்கு வந்த தி.மு.க. தலைவர் ஸ்டாலினை வரவேற்க வந்த கட்சி தொண்டர்கள் விமான நிலையத்தில் அதிக ஒலி எழுப்பியதால் பயணிகளுக்கு முகம் சுழிப்பு ஏற்பட்டது.


கோவை : கோவை விமான நிலையத்திற்கு வந்த தி.மு.க. தலைவர் ஸ்டாலினை வரவேற்க வந்த கட்சி தொண்டர்கள் விமான நிலையத்தில் அதிக ஒலி எழுப்பியதால் பயணிகளுக்கு முகம் சுழிப்பு ஏற்பட்டது.

கோவையில் நாளை அவினாசி சாலை, நவ இந்தியா பகுதியில் உள்ள மீனாட்சி ஹாலில் மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மு.இராமநாதன், க.ரா.சுப்பையன் ஆகியோரின் திருவுருவ படத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றவும், மாலை 5 மணிக்கு பொள்ளாச்சியில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற விமானம் மூலம் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கோவை வந்தார். அவரை வரவேற்க கட்சியினர் ஏராளமானோர் விமான நிலையம் வந்திருந்தனர்.



கோவை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கபட்டது. இதனை தொடர்ந்து, அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். அவரை வரவேற்க வந்த தொண்டர்கள் பலர் கார்களில் வந்திருந்தனர். அவரை பின் தொடர்ந்து காரில் ஒலி எழுப்பியபடி பின் தொடர்ந்தனர். இதனை அங்கிருந்தவர்கள் காதை பொத்தி கொண்டு முகம் சுழித்தபடி அங்கிருந்து வெளியேறினர். தலைவர்களை வரவேற்க வேண்டியது தான் அது பொதுமக்களுக்கு இடையூறு இல்லாது இருக்க வேண்டும் அல்லவா என முனுமுனுத்தபடியே சென்றனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...