Breaking: உத்தரபிரதேசம் சுற்றுலா சென்ற கோவையை சேர்ந்த 4 பேர் பலி

கோவை : உத்தரப்பிரதேசத்திற்கு சுற்றுலா சென்று விட்டு தமிழகம் திரும்பிக் கொண்டிருந்த கோவையைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை : உத்தரப்பிரதேசத்திற்கு சுற்றுலா சென்று விட்டு தமிழகம் திரும்பிக் கொண்டிருந்த கோவையைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த ஆண்டு வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக, வடமாநிலங்களில் வெயிலின் தாக்கத்தினால் பலர் பலியாகியுள்ளனர்.

இதில், ராஜஸ்தான், டெல்லி, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா, சண்டீகர் போன்ற மாநிலங்களில் வெயிலின் தாக்கம் ஆனது அதிகமாகவே இருந்தது. இந்த வெயிலின் தாக்கத்தினால் வெப்பக்காற்று நாளும் பொதுமக்கள் சிரமமடைந்து வருகின்றனர். இந்த கடுமையான வெப்பத்தினால் குறிப்பிட்ட சில மாநில மக்களின் அன்றாட வாழ்க்கையே பாதிக்கப்பட்டுள்ளது.



இந்த நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்திற்கு கோவையில் இருந்து சுற்றுலா சென்ற 4 பேர், தமிழகம் திரும்பிய போது வெயிலின் தாக்கத்தினால் பலியாகினர். பச்சையா (80), பாலகிருஷ்ணன் (67), தனலட்சுமி (74) சுப்பர் ஐயா (71) ஆகிய 4 பேரும், கேரளா எக்ஸ்பிரஸில் வாரணாசி, ஆக்ரா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று விட்டு, தமிழகம் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர். நேற்று மாலை ஜான்சி என்ற பகுதியில் ரயில் வந்து கொண்டிருந்த போது, திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் கோவை மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...