கோவை : உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, கோவை நகரை பசுமையாக்கும் நோக்கத்தில் யுவா பவுண்டேஷன் ’கஸ்தூரி வனம்’ என்ற திட்டத்தை துவக்கியுள்ளது.
கோவை : உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, கோவை நகரை பசுமையாக்கும் நோக்கத்தில் யுவா பவுண்டேஷன் ’கஸ்தூரி வனம்’ என்ற திட்டத்தை துவக்கியுள்ளது.
சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் கூறியுள்ளதாவது:- தமிழ்நாடு முழுவதும் 12 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளோம். மரக்கன்றுகளை சரியான இடத்தில் நட்டு பராமரிக்க விரும்பும் எந்த நிறுவனத்துடனும் இணைந்து செயல்பட தயாராக உள்ளது. மாநில அளவிலும், நகரங்களிலும் பசுமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. உலக வெப்பமயமாதல், பருவநிலை மாற்றங்களை தவிர்க்க, இத்தகயை முயற்சியை மேற்கொண்டு வருகிறது. அதிக அளவில் மரங்களை நடுவதால், அதிக மழையும், நல்ல சூழலையும் பெற முடியும். நொய்யல் கரையோரம் உள்ள எஸ்.எஸ்.வி.எம். பள்ளியில் மரக்கன்றுகளை நடுவதால், இந்த செய்தி, நாட்டின் வருங்கால மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் சென்றடையும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

இத்கனிடையே, சுற்றுச் சூழல் முயற்சியின் துவக்கமாக எஸ்.எஸ்.வி.எம் பள்ளி அருகே உள்ள நொய்யல் ஆற்றின் கரையோரத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராஜாமணி, கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார், எஸ்.எஸ்.வி.எம் நிர்வாக அறங்காவலர் மற்றும் நிறுவனர் முனைவர் மணிமேகலை மோகன் ஆகியோர் பங்கேற்றனர்.
சந்திரா யுவா பவுண்டேஷன் தலைமை செயல் அதிகாரி எஸ்.சசிகலா நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நகரில் பல இடங்களில் பசுமையை ஏற்படுத்தும் விதமாக, சந்திரா யுவா பவுண்டேஷன் இந்த திட்டத்தை துவக்கியுள்ளது. ஏற்கனவே இந்த பவுண்டேஷன், பல இடங்களை தூய்மைப்படுத்தும் விதமாக உக்கடம் பஸ் ஸ்டாண்டை தூய்மை செய்து, சுவர்களில் வண்ணம் தீட்டியுள்ளோம். சிறையில் உள்ள மகளிருக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி அளித்துள்ளோம். சிறை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுள்ளோம். மரக்கன்று நடும் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த உள்ளோம்,’’ என்றார்.
சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் கூறியுள்ளதாவது:- தமிழ்நாடு முழுவதும் 12 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளோம். மரக்கன்றுகளை சரியான இடத்தில் நட்டு பராமரிக்க விரும்பும் எந்த நிறுவனத்துடனும் இணைந்து செயல்பட தயாராக உள்ளது. மாநில அளவிலும், நகரங்களிலும் பசுமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. உலக வெப்பமயமாதல், பருவநிலை மாற்றங்களை தவிர்க்க, இத்தகயை முயற்சியை மேற்கொண்டு வருகிறது. அதிக அளவில் மரங்களை நடுவதால், அதிக மழையும், நல்ல சூழலையும் பெற முடியும். நொய்யல் கரையோரம் உள்ள எஸ்.எஸ்.வி.எம். பள்ளியில் மரக்கன்றுகளை நடுவதால், இந்த செய்தி, நாட்டின் வருங்கால மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் சென்றடையும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

இத்கனிடையே, சுற்றுச் சூழல் முயற்சியின் துவக்கமாக எஸ்.எஸ்.வி.எம் பள்ளி அருகே உள்ள நொய்யல் ஆற்றின் கரையோரத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராஜாமணி, கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார், எஸ்.எஸ்.வி.எம் நிர்வாக அறங்காவலர் மற்றும் நிறுவனர் முனைவர் மணிமேகலை மோகன் ஆகியோர் பங்கேற்றனர்.
சந்திரா யுவா பவுண்டேஷன் தலைமை செயல் அதிகாரி எஸ்.சசிகலா நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நகரில் பல இடங்களில் பசுமையை ஏற்படுத்தும் விதமாக, சந்திரா யுவா பவுண்டேஷன் இந்த திட்டத்தை துவக்கியுள்ளது. ஏற்கனவே இந்த பவுண்டேஷன், பல இடங்களை தூய்மைப்படுத்தும் விதமாக உக்கடம் பஸ் ஸ்டாண்டை தூய்மை செய்து, சுவர்களில் வண்ணம் தீட்டியுள்ளோம். சிறையில் உள்ள மகளிருக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி அளித்துள்ளோம். சிறை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுள்ளோம். மரக்கன்று நடும் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த உள்ளோம்,’’ என்றார்.