கோவையில் டாஸ்மாக் கடையை சேதப்படுத்திய வழக்கில் 5 பேருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை

கோவை : கோவையில் டாஸ்மாக் கடையை சேதப்படுத்திய வழக்கில் 5 பேருக்கு தலா ஓராண்டு சிறை மற்றும் ரூ. 1,000 அபராதம் விதித்து கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை : கோவையில் டாஸ்மாக் கடையை சேதப்படுத்திய வழக்கில் 5 பேருக்கு தலா ஓராண்டு சிறை மற்றும் ரூ. 1,000 அபராதம் விதித்து கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உக்கடம் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வந்த டாஸ்மார்க் கடையை மூடக்கோரி கடந்த 2010-ம் ஆண்டு அப்பகுதியைச் சேர்ந்த கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, நடைபெற்ற போராட்டத்தில் பொதுமக்களில் சிலர் கடைக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில், டாஸ்மாக் கடையை சேதப்படுத்தியதாக நசீர், அபுதாஹிர், வளையல் ஹக்கீம், காஜா ஹுசைன், முஜிபுர் ரஹ்மான் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு கோவை நீதிமன்றத்தில் இன்று வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேருக்கும் ஓராண்டு சிறை, 1,000 ரூபாய் அபராதம் விதித்து கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், இந்த வழக்கில் ஒருவரான வளையல் ஹக்கிம், 2013-ம் ஆண்டு பெங்களூரில் பா.ஜ.க. அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கில் கைதாகி பெங்களூர் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...