அனுமதியின்றி செயல்படும் ரேப்பிடோ இருசக்கர வாகன டேக்ஸிக்கு தடை விதிக்கக்கோரி கோவை ஆட்சியரிடம் மனு

கோவை : அனுமதியின்றி செயல்படும் ரேப்பிடோ இருசக்கர வாகன டேக்ஸிக்கு தடை விதிக்கக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் மனு அளித்தனர்.


கோவை : அனுமதியின்றி செயல்படும் ரேப்பிடோ இருசக்கர வாகன டேக்ஸிக்கு தடை விதிக்கக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் மனு அளித்தனர். 

கோவை மாநகரில் கால் டாக்ஸி, ஷேர் ஆட்டோ, தனியார் ஆட்டோக்கள் பெருகி விட்ட நிலையில், ரேப்பிடோ இருசக்கர வாகன டேக்ஸி தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. மொபைல் செயலி மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட இந்த ரேப்பிடோ மூலம் பதிவு செய்யப்பட்டால், சவாரிக்கு புக் செய்யப்படும் இடத்தில் பிக்-அப் செய்து எங்கு இறக்கி விடப்படுகிறார்களோ அதற்கான தொகையை செலுத்தும்படி உள்ளது. இது தற்போது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று உள்ளது. சொகுசு பேருந்து, ஷேர் ஆட்டோக்களை விட கட்டணமாக குறைவாக உள்ளதால் பெரும்பாலானோர் இதனை உபயோகித்து கொள்கின்றனர். இந்த நிலையில், ரேப்பிடோ டேக்ஸியால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், ரேப்பிடோவை தடை செய்ய வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 



இது குறித்து அவர்கள் கூறுகையில், 5,000-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. அரசு நிர்ணயம் செய்த மீட்டர் கட்டணத்தில் வாகனங்களை இயக்கி வரும் நிலையில், இதனையே தொழிலாக நம்பி வாழ்ந்து வருபவர்கள் ரேப்பிடோ இரு சக்கர வாகன சவாரி கட்டணத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அன்றாட வாழ்வாதாரத்திற்கே அவதிப்பட்டு வருகின்றனர். அனுமதியின்றி செயல்படும் இதனை தடை செய்ய வேண்டும், என வலியுறுத்தினர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...