கோவை : குடிநீர் இணைப்பு உடனடியாக வழங்கிட வலியுறுத்தி டி.வி.எச் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை : குடிநீர் இணைப்பு உடனடியாக வழங்கிட வலியுறுத்தி டி.வி.எச் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை - திருச்சி சாலை கள்ளிமடை பகுதி அருகே அமைந்துள்ளது டி.வி.எச் அடுக்குமாடி குடியிருப்பு. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 450-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பு பகுதியான இதில் வசிப்பவர்களுக்கு இதுவரை குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகிகளிடம் தெரிவித்த போது, குடிநீர் இணைப்புக்கு உண்டான பணத்தை மாநகராட்சி இடம் செலுத்தி விட்டதாகவும், இணைப்பு கொடுக்க அவர்கள் கால தாமதப்படுத்துவதாக கூறுவதாக தெரிவித்தனர். எனவே, குடிநீர் இன்றி அவதிப்பட்டு வருவதால் மாநகராட்சி உடனடியாக தங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும் அவர் கூறுகையில், "அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்குகின்றனர். குழந்தைகளுடன் வசிக்கும் தங்களுக்கு தண்ணீர் பிரச்சனை பெரும் பிரச்சினையாக உள்ளது. உடனடியாக மாநகராட்சி தங்களுக்கு இணைப்பை வழங்கிட வேண்டும். இதற்கு மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்தனர்.
கோவை - திருச்சி சாலை கள்ளிமடை பகுதி அருகே அமைந்துள்ளது டி.வி.எச் அடுக்குமாடி குடியிருப்பு. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 450-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பு பகுதியான இதில் வசிப்பவர்களுக்கு இதுவரை குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகிகளிடம் தெரிவித்த போது, குடிநீர் இணைப்புக்கு உண்டான பணத்தை மாநகராட்சி இடம் செலுத்தி விட்டதாகவும், இணைப்பு கொடுக்க அவர்கள் கால தாமதப்படுத்துவதாக கூறுவதாக தெரிவித்தனர். எனவே, குடிநீர் இன்றி அவதிப்பட்டு வருவதால் மாநகராட்சி உடனடியாக தங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும் அவர் கூறுகையில், "அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்குகின்றனர். குழந்தைகளுடன் வசிக்கும் தங்களுக்கு தண்ணீர் பிரச்சனை பெரும் பிரச்சினையாக உள்ளது. உடனடியாக மாநகராட்சி தங்களுக்கு இணைப்பை வழங்கிட வேண்டும். இதற்கு மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்தனர்.