மாரடைப்பால் நடிகர் கிரேசி மோகன் இன்று காலமானார் : திரையுலகத்தினர் இரங்கல்

சென்னை : திரைக்கதை - வசன கர்த்தாவாகவும், நகைச்சுவை நடிகராகவும் திரையுலகில் வலம் வந்த நடிகர் கிரேசி மோகன் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 66

சென்னை : திரைக்கதை - வசன கர்த்தாவாகவும், நகைச்சுவை நடிகராகவும் திரையுலகில் வலம் வந்த நடிகர் கிரேசி மோகன் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 66

கிரேசி மோகன் 1952ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். இவர் ஒரு காமெடி நடிகராக நமக்கு அறிமுகம் ஆனார். ஆனால், இவர் உண்மையில் ஒரு கதையாசிரியர். சென்னை அண்ணா யூனிவர்சிட்டியில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்தவர். 1972ஆம் ஆண்டு அந்த கல்லூரியில் தமிழ் மன்றத்திற்காக ஒரு கதை எழுதி நாடகத்தை அரங்கேற்றினார். இந்த கதையை பாராட்டி நடிகர் கமல்ஹாசன் அவருக்கு பரிசினை வழங்கினார். அன்றிலிருந்து கிரேசி மோகன் கதையாசியரியராக மாறிவிட்டார். அடிப்படையில் பொறியாளரான இவர் நடிகர் கமல்ஹாசன் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார். அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்கு வசனம் எழுதியதைத் தொடர்ந்து மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு கதை-வசன கர்த்தாவாக பணியாற்றியுள்ளார். முழுக்கவே நகைச்சுவையாக எழுதுவது இவரது சிறப்பு. 

இந்த நிலையில், சென்னை காவேரி மருத்துவமனையில் சற்று நேரத்திற்கு முன்னர் மாரடைப்பு காரணமாக கிரேசி மோகன் உயிர் பிரிந்துள்ளது. கிரேசி மோகனின் இந்த மறைவு தமிழ் சினிமாவிற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழப்பாகும். தமிழ்த் திரையுலகில் கதை-வசன கர்த்தாவாகவும், நகைச்சுவை நடிகராகவும் தமிழ் கிரேசி மோகன், நாடக ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார். பல மேடை நாடகங்களை இயக்கி நடித்துள்ளார். இவரது நாடகத்தின் மூலம் பல்வேறு கலைஞர்கள் சினிமாவிலும் கால்பதித்துள்ளனர். பிரபல காமெடி நடிகரான சதீசும் இவரிடம் உதவியாளராக பணியாற்றியவர் தான். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...