கோத்தகிரியில் 17 ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்ட அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை தீவிரம்

நீலகிரி : கோத்தகிரி அருகே பொதுமக்களின் முயற்சியால் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்ட அரசுப் பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நீலகிரி : கோத்தகிரி அருகே பொதுமக்களின் முயற்சியால் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்ட அரசுப் பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. 



நீலகிரி மாவட்டத்தில் உள்ள 5-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவாக இருப்பதால், வரும் செப்டம்பர் மாதத்திற்குள் புதிய மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முழுவீச்சில் இறங்கி வருகிறது. இந்த நிலையில், கோத்தகிரி அருகே திம்பட்டி கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி துவக்கப்பட்டது. இப்பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வந்த நிலையில், ஆங்கில மோகத்தின் காரணமாக பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்த்தனர். மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததை அடுத்து, 2002ம் ஆண்டு அந்தப் பள்ளி நிரந்தரமாக மூடப்பட்டது.



இதனையடுத்து, அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் சீரிய முயற்சியால் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இப்பள்ளி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. தற்போது, ஆங்கில வழி கல்வியாக 40 மாணவ, மாணவிகளுடன் திறக்கப்பட்டுள்ள இப்பள்ளியில், இப்பகுதியில் உள்ள பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். மூடும் தருவாயில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மத்தியில், மூடிய பள்ளியை கிராம மக்கள் திறந்திருப்பது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...