சிறைபிடித்து வைத்திருக்கும் சகோதரரை விடுவிக்கக்கோரி திருப்பூரில் காவல்நிலையம் முன்பு மாநகராட்சி ஒப்பந்ததாரர் அரைநிர்வாண போராட்டம்

திருப்பூர் : திருப்பூரில் போலீசார் சட்டவிரோதமாக 5 நாட்களாக அடைத்து வைத்திருக்கும் தனது சகோதரரை விடுவிக்கக் கோரி காவல்நிலையம் முன்பு மாநகராட்சி ஒப்பந்ததாரர் அரைநிர்வாண போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் : திருப்பூரில் போலீசார் சட்டவிரோதமாக 5 நாட்களாக அடைத்து வைத்திருக்கும் தனது சகோதரரை விடுவிக்கக் கோரி காவல்நிலையம் முன்பு மாநகராட்சி ஒப்பந்ததாரர் அரைநிர்வாண போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் வாவிபாளையத்தில் கடந்த மே மாதம் பனியன் நிறுவனத்தின் பூட்டை உடைத்து சுமார் 9 லட்சத்து 45 ஆயிரம் மதிப்புள்ள இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் திருட்டு போயிருந்தன. இந்த சம்பவம் குறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் திருப்பூர் எம்.எஸ். நகரில் வசித்து வரும் மாநகராட்சி ஒப்பந்ததாரர் தினகரன் என்பரது சகோரர் ராஜா என்பவருக்கு திருட்டு சம்பவத்தில் தொடர்பிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து, கடந்த 5 நாட்களுக்கு முன்னர் ராஜாவை சாதாரண உடையில் இருந்த 6 பேர் கொண்ட கும்பல் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதனிடையே, தனது சகோதரர் ராஜா குறித்து தினகரன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள காவல்நிலையங்களுக்கு சென்று விசாரித்து கொண்டிருந்த போது, ராஜாவின் கார் திருமுருகன்பூண்டி காவல்நிலையத்தில் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, காவல் நிலைய ஆய்வாளரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் குறித்து எந்த ஒரு தகவலையும் தர மறுத்துவிட்டதாக கூறப்படுகிரது. 



இந்த நிலையில், இன்று திருமுருகன்பூண்டி காவல்நிலையம் வந்த தினகரன், தனது சகோதரை மீட்க மேல்சட்டையை கழற்றி காவல்நிலையம் முன்பாக அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட தினகரனை சமாதானப்படுத்திய போலீசார், காவல் நிலையம் அழைத்து சென்று, அவரது சகோதரர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதன் விவரங்களை வழங்கினர். இதையடுத்து, காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...