திருப்பூர் : திருப்பூர் அருகே எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் கார் பாய்ந்து விழுந்த விபத்தில், காரில் பயணித்த 5 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருப்பூர் : திருப்பூர் அருகே எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் கார் பாய்ந்து விழுந்த விபத்தில், காரில் பயணித்த 5 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருப்பூரைச் சேர்ந்த சென்ட்ராயன் மற்றும் அவரது குடும்பத்தினர் வத்தலகுண்டு சென்றுவிட்டு இன்று மதியம் திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது, கோவில்பாளையம் அருகே வந்து கொண்டிருந்த போது கார் எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த கிணற்றில் விழுந்தது. கிணற்றில் 5 அடி மட்டுமே நீர் இருந்த நிலையில் உடனடியாக சம்பவம் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றுக்குள் இருந்த 5 பேரையும் பத்திரமாக மீட்டு, கிணற்றுக்குள் விழுந்த காரையும் மீட்டனர். உடனடியாக மீட்கப்பட்ட அனைவரும் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


திருப்பூரைச் சேர்ந்த சென்ட்ராயன் மற்றும் அவரது குடும்பத்தினர் வத்தலகுண்டு சென்றுவிட்டு இன்று மதியம் திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது, கோவில்பாளையம் அருகே வந்து கொண்டிருந்த போது கார் எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த கிணற்றில் விழுந்தது. கிணற்றில் 5 அடி மட்டுமே நீர் இருந்த நிலையில் உடனடியாக சம்பவம் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றுக்குள் இருந்த 5 பேரையும் பத்திரமாக மீட்டு, கிணற்றுக்குள் விழுந்த காரையும் மீட்டனர். உடனடியாக மீட்கப்பட்ட அனைவரும் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
