கோவை : காளப்பட்டி அருகே உள்ள குளத்தில் கர்நாடகாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பீர் கழிவுகளைக் கொட்ட இருந்த நிலையில் பொதுமக்கள் லாரியை மடக்கி பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
கோவை : காளப்பட்டி அருகே உள்ள குளத்தில் கர்நாடகாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பீர் கழிவுகளைக் கொட்ட இருந்த நிலையில் பொதுமக்கள் லாரியை மடக்கி பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
கோவை மாவட்டத்தின் எல்லையோரப் பகுதிகளில் வெளி மாநிலங்களில் இருந்து கழிவுகள் கொட்டப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. இதில். குறிப்பாக கேரளா எல்லைப் பகுதிகளான மதுக்கரை, க.க சாவடி, போன்ற பகுதிகளில் கோழிக்கழிவு உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் வெளிமாநிலங்களில் இருந்து வந்து கொட்டப்பட்டு வந்த நிலையில், பொதுமக்கள் லாரிகளை சிறைபிடித்து தடுத்து நிறுத்தி வருகின்றனர். இதில், சரவணம்பட்டி பகுதியிலும் அடிக்கடி மோசமான கழிவுகள் கொட்டப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது.

இந்த நிலையில், இன்று காலை கோவை காளப்பட்டி அடுத்த வெள்ளானைப்பட்டி செல்லும் சாலையில் உள்ள குளத்தில் லாரியில் கொண்டு வந்த கழிவுகளை கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் கொட்ட முயன்று வந்தனர். இதையடுத்து, தகவலறிந்த பொதுமக்கள் லாரியை சிறைபிடித்து, காவல்துறையினருக்கும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை செய்ததில் லாரியில் பீர் கழிவுகள் இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸால் கேரள எல்லைகளில் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரித்துள்ளது. இதனால், அதிகாரிகளிடம் மாட்டிக் கொள்ளக் கூடாது என்ற அடிப்படையில் கோவையில் கொட்டி விட்டோம் என தெரிவித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் பொதுமக்கள் இந்தப் பகுதிகளில் அடிக்கடி கழிவுகள் கொட்டப்பட்டு தான் வருகிறது என தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தின் எல்லையோரப் பகுதிகளில் வெளி மாநிலங்களில் இருந்து கழிவுகள் கொட்டப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. இதில். குறிப்பாக கேரளா எல்லைப் பகுதிகளான மதுக்கரை, க.க சாவடி, போன்ற பகுதிகளில் கோழிக்கழிவு உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் வெளிமாநிலங்களில் இருந்து வந்து கொட்டப்பட்டு வந்த நிலையில், பொதுமக்கள் லாரிகளை சிறைபிடித்து தடுத்து நிறுத்தி வருகின்றனர். இதில், சரவணம்பட்டி பகுதியிலும் அடிக்கடி மோசமான கழிவுகள் கொட்டப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது.

இந்த நிலையில், இன்று காலை கோவை காளப்பட்டி அடுத்த வெள்ளானைப்பட்டி செல்லும் சாலையில் உள்ள குளத்தில் லாரியில் கொண்டு வந்த கழிவுகளை கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் கொட்ட முயன்று வந்தனர். இதையடுத்து, தகவலறிந்த பொதுமக்கள் லாரியை சிறைபிடித்து, காவல்துறையினருக்கும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை செய்ததில் லாரியில் பீர் கழிவுகள் இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸால் கேரள எல்லைகளில் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரித்துள்ளது. இதனால், அதிகாரிகளிடம் மாட்டிக் கொள்ளக் கூடாது என்ற அடிப்படையில் கோவையில் கொட்டி விட்டோம் என தெரிவித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் பொதுமக்கள் இந்தப் பகுதிகளில் அடிக்கடி கழிவுகள் கொட்டப்பட்டு தான் வருகிறது என தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.