கோவை : மலுமச்சம்பட்டியில் உள்ள நேரு மகா வித்யாலயா கல்லூரி வரை அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு அமைச்சர் எஸ்.பி. வேலுமணியிடம் வழங்கப்பட்டது.
கோவை : மலுமச்சம்பட்டியில் உள்ள நேரு மகா வித்யாலயா கல்லூரி வரை அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு அமைச்சர் எஸ்.பி. வேலுமணியிடம் வழங்கப்பட்டது.
கோவை நலவாரிய சங்கத்தின் தலைவர் ரமேஷ் பஃப்னா, செயலாளர் அசோக் குண்டேச்சா, எஸ்.என்.எம்.வி. கல்லூரியின் முதல்வர் பி. சுப்ரமணி உள்ளிட்ட பலர் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதில், அரசுப் பேருந்துகளை நேரு மகா வித்யாலாயா கல்லூரி அமைந்துள்ள சாலைகள் வரை இயக்க வேண்டும் என சுமார் 3,000 தொழில்நிறுவனத்தினர் மற்றும் குடியிருப்பு வாசிகளின் கையொப்பம் அடங்கிய கோரிக்கை கடிதத்தை கொடுத்தனர்.

மேலும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய வசதிகளை கல்லூரி வரை விரிவுபடுத்த வேண்டும் என்றும், எல்&டி சாலை சந்திப்பில் கல்லூரியின் பெயர் பலகையை வைக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனைப் பெற்றுக் கொண்ட அமைச்சர், சட்டதிட்டங்களுக்குட்பட்டு கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
கோவை நலவாரிய சங்கத்தின் தலைவர் ரமேஷ் பஃப்னா, செயலாளர் அசோக் குண்டேச்சா, எஸ்.என்.எம்.வி. கல்லூரியின் முதல்வர் பி. சுப்ரமணி உள்ளிட்ட பலர் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதில், அரசுப் பேருந்துகளை நேரு மகா வித்யாலாயா கல்லூரி அமைந்துள்ள சாலைகள் வரை இயக்க வேண்டும் என சுமார் 3,000 தொழில்நிறுவனத்தினர் மற்றும் குடியிருப்பு வாசிகளின் கையொப்பம் அடங்கிய கோரிக்கை கடிதத்தை கொடுத்தனர்.

மேலும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய வசதிகளை கல்லூரி வரை விரிவுபடுத்த வேண்டும் என்றும், எல்&டி சாலை சந்திப்பில் கல்லூரியின் பெயர் பலகையை வைக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனைப் பெற்றுக் கொண்ட அமைச்சர், சட்டதிட்டங்களுக்குட்பட்டு கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.