கோவை : உலக அளவில் இந்திய உற்பத்தியாளர்களுக்கான வாய்ப்புகளை அடையாளம் காணும் வகையிலான உலகளாவிய உற்பத்தி மாநாடு கோவையில் நேற்று நடைபெற்றது.
கோவை : உலக அளவில் இந்திய உற்பத்தியாளர்களுக்கான வாய்ப்புகளை அடையாளம் காணும் வகையிலான உலகளாவிய உற்பத்தி மாநாடு கோவையில் நேற்று நடைபெற்றது.

இன்டெக் மற்றும் கொடிசியா கூட்டமைப்பு சார்பில் சர்வதேச அளவிலான உலகளாவிய உற்பத்தி மாநாடு ஓட்டல் ரேடிசன் ப்ளூவில் நேற்று நடைபெற்றது. உலக அளவில் இந்திய உற்பத்தியாளர்களுக்கான வாய்ப்புகளை அடையாளம் கண்டு, அதனை சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை மையமாகக் கொண்டு இந்த மாநாடு நடைபெற்றது. இதில், கொடிசியாவின் தலைவர் ஆர். ராமமூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் பேசியதாவது :- நாட்டின் முதல் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் மையம் கொடிசியாவில் முதல்முறையாக அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, திருச்சி, சேலம், ஓசூர், கோவை நகரங்களை இணைக்கும் வகையிலான ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி ஆயோக்கின் அடல் இன்குபேஷன் சென்டரும் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், கோவையில் கொடிசியா 2 தொழிற்பூங்காக்களை மேம்படுத்தியுள்ளது. மொத்தம் 375 ஏக்கர் பரப்பளவில் 320 தொழில் உறுப்பினர்கள் உள்ளனர். இந்த பூங்காக்களில் மொத்தம் ரூ. 3,000 கோடி முதலீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளாவிய தயாரிப்பு கூட்டுப்பார்வையில் ஜி.எம்.சி.வி. 2030 மாநாட்டின் நோக்கமானது, இந்திய உற்பத்தியாளர்களுக்கு சிறந்த அடித்தளத்தை அமைத்து தர வேண்டும் உள்பட பல்வேறு பிரச்சனைகள் பற்றி விவாதிக்கப்படுவதே ஆகும். புதுமையான சிந்தனை, முயற்சி மற்றும் தொழில் ஆகியவற்றை உள்ளடக்கியது ஜி.எம்.சி.வி. 2030. அடுத்த 5 அல்லது 10 ஆண்டுகளுக்குள் தயாரிப்பு தொழில்நிறுவனங்களும் முற்றிலும் மாறுபட்டு இருக்கும். ஒரு நாடு, ஒரு இடம் என்ற நிலையில் இருந்து பல நாடு, பல இடம் என நிறுவனங்கள் அமைந்திருக்கும், என்றார்.

மாநாட்டின் தலைவர் ஜெய்ராம் வரதராஜன் கூறுகையில், "சர்வதேச சந்தைகளில் இருக்கும் வேகத்தை நிலைப்படுத்த விநோதமான தயாரிப்புகள் அவசியமாகின்றன. வளர்ச்சிக்கான மாற்றுவழி என்பது மெதுவானதாகும். எனவே, சவால்மிக்க சந்தைகளில் நிலைத்து நிற்க நிறுவனங்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். இந்தியா சரியான பக்கத்தில் இல்லை. இந்தியர்கள் நமது திறமைகளைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும். நமது திறமைகளை உயர்ந்த விலைக்குக் கொண்டு செல்ல வேண்டும்," எனக் கூறினார்.


இன்டெக் மற்றும் கொடிசியா கூட்டமைப்பு சார்பில் சர்வதேச அளவிலான உலகளாவிய உற்பத்தி மாநாடு ஓட்டல் ரேடிசன் ப்ளூவில் நேற்று நடைபெற்றது. உலக அளவில் இந்திய உற்பத்தியாளர்களுக்கான வாய்ப்புகளை அடையாளம் கண்டு, அதனை சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை மையமாகக் கொண்டு இந்த மாநாடு நடைபெற்றது. இதில், கொடிசியாவின் தலைவர் ஆர். ராமமூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் பேசியதாவது :- நாட்டின் முதல் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் மையம் கொடிசியாவில் முதல்முறையாக அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, திருச்சி, சேலம், ஓசூர், கோவை நகரங்களை இணைக்கும் வகையிலான ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி ஆயோக்கின் அடல் இன்குபேஷன் சென்டரும் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், கோவையில் கொடிசியா 2 தொழிற்பூங்காக்களை மேம்படுத்தியுள்ளது. மொத்தம் 375 ஏக்கர் பரப்பளவில் 320 தொழில் உறுப்பினர்கள் உள்ளனர். இந்த பூங்காக்களில் மொத்தம் ரூ. 3,000 கோடி முதலீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளாவிய தயாரிப்பு கூட்டுப்பார்வையில் ஜி.எம்.சி.வி. 2030 மாநாட்டின் நோக்கமானது, இந்திய உற்பத்தியாளர்களுக்கு சிறந்த அடித்தளத்தை அமைத்து தர வேண்டும் உள்பட பல்வேறு பிரச்சனைகள் பற்றி விவாதிக்கப்படுவதே ஆகும். புதுமையான சிந்தனை, முயற்சி மற்றும் தொழில் ஆகியவற்றை உள்ளடக்கியது ஜி.எம்.சி.வி. 2030. அடுத்த 5 அல்லது 10 ஆண்டுகளுக்குள் தயாரிப்பு தொழில்நிறுவனங்களும் முற்றிலும் மாறுபட்டு இருக்கும். ஒரு நாடு, ஒரு இடம் என்ற நிலையில் இருந்து பல நாடு, பல இடம் என நிறுவனங்கள் அமைந்திருக்கும், என்றார்.

மாநாட்டின் தலைவர் ஜெய்ராம் வரதராஜன் கூறுகையில், "சர்வதேச சந்தைகளில் இருக்கும் வேகத்தை நிலைப்படுத்த விநோதமான தயாரிப்புகள் அவசியமாகின்றன. வளர்ச்சிக்கான மாற்றுவழி என்பது மெதுவானதாகும். எனவே, சவால்மிக்க சந்தைகளில் நிலைத்து நிற்க நிறுவனங்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். இந்தியா சரியான பக்கத்தில் இல்லை. இந்தியர்கள் நமது திறமைகளைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும். நமது திறமைகளை உயர்ந்த விலைக்குக் கொண்டு செல்ல வேண்டும்," எனக் கூறினார்.
