நீலகிரி : நகைக்கடன், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி தி.மு.க. எம்.பி.யின் அலுவலகத்தை பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க.வினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நீலகிரி : நகைக்கடன், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி தி.மு.க. எம்.பி.யின் அலுவலகத்தை பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க.வினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நீலகிரி மாவட்டத்தில் மக்களவை உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆ.ராசா இன்று நன்றி தெரிவிப்பதற்காக உதகை, குன்னூர் போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்களை சந்திப்பதற்காக வருகை தந்திருந்தார். அந்த நேரத்தில், மக்களவை உறுப்பினர் அலுவலகப் பகுதிக்கு அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் குவிந்திருந்தனர். அப்போது, நகைக்கடன் மற்றும் விவசாயக் கடன், கல்விக் கடன் உள்ளிட்டவற்றை தள்ளுபடி செய்வதாகக் கூறி வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுவிட்டு, தற்போது ஆ. ராசா இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தி.மு.க., எம்.பி. அலுவலகம் முன்பு சாலை மறியல் மற்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனைத் தொடர்ந்து, அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களை சமாதானம் செய்து வைத்து அங்கிருந்து அனுப்பினர்.

நீலகிரி மாவட்டத்தில் மக்களவை உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆ.ராசா இன்று நன்றி தெரிவிப்பதற்காக உதகை, குன்னூர் போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்களை சந்திப்பதற்காக வருகை தந்திருந்தார். அந்த நேரத்தில், மக்களவை உறுப்பினர் அலுவலகப் பகுதிக்கு அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் குவிந்திருந்தனர். அப்போது, நகைக்கடன் மற்றும் விவசாயக் கடன், கல்விக் கடன் உள்ளிட்டவற்றை தள்ளுபடி செய்வதாகக் கூறி வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுவிட்டு, தற்போது ஆ. ராசா இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தி.மு.க., எம்.பி. அலுவலகம் முன்பு சாலை மறியல் மற்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனைத் தொடர்ந்து, அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களை சமாதானம் செய்து வைத்து அங்கிருந்து அனுப்பினர்.