குன்னூர் அரசு மருத்துவமனையில் தண்ணீர் பற்றாக்குறை : சிகிச்சை முடியாத நிலையிலும் வீடு திரும்பும் நோயாளிகள்

நீலகிரி : குன்னூர் அரசு மருத்துவமனையில் கடந்த 15 நாட்களாக தண்ணீர் இல்லாததால், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் வீடு திரும்பும் அவலம் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி : குன்னூர் அரசு மருத்துவமனையில் கடந்த 15 நாட்களாக தண்ணீர் இல்லாததால், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் வீடு திரும்பும் அவலம் ஏற்பட்டுள்ளது.



நீலகிரி மாவட்டத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த அரசு மருத்துவமனையில் குன்னூர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் உள்ள நோயாளிகள் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இங்கு புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 15 நாட்களாக நகராட்சி சார்பாக வழங்கப்படும் தண்ணீர் முறையாக வழங்கப்படாததால் நோயாளிகள் குடிக்கத் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர். இதேபோன்று, பிரசவ வார்டு குழந்தைகள் தங்கும் அறைகள் மற்றும் கழிவறைகளில் போதுமான தண்ணீர் இல்லாததால் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் வீடுகளுக்கு திரும்பும் அவலம் ஏற்பட்டுள்ளது. 



இது குறித்து பல்வேறு முறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நகராட்சி அதிகாரிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று நோயாளிகளின் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...