நீலகிரி : மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு ஏல மையத்தில் உதகை உருளைக்கிழங்கிற்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நீலகிரி : மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு ஏல மையத்தில் உதகை உருளைக்கிழங்கிற்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பயிர் செய்யப்படும் மலைக்காய்கறிகள் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்குக் கொண்டு வரப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு, பின்னர் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் லாரிகள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக, நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்கு எப்போதும் தனிசுவையுடன் இருப்பதால் மார்கெட்டில் இதற்கென தனித்துவம் இருந்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் கடந்த மூன்று மாதங்களாக நீலகிரி உருளைக்கிழங்கிற்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் மிகவும் நஷ்டத்தை சந்தித்து வந்தனர். 45 கிலோ எடை கொண்ட ஒரு உருளைக்கிழங்கு மூட்டையின் விலை ரூ. 700 முதல் ரூ. 900 வரையே அதிகபட்சமாக விற்பனையானது. மேட்டுப்பாளையம் மொத்த மார்கெட்டிற்கு தினசரி 70 முதல் 80 லோடு உருளைக்கிழங்கு ஏல மையத்திற்கு கொண்டு வரப்படும். கடந்த சில மாதங்களாக அதன் நிலையற்ற விலை மற்றும் ஏற்றுமதியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக உற்பத்தி குறைந்து 10 லோடாக வரத்து வெகுவாக குறைந்து வந்தது. இதனிடையே, தொடர்ந்து சரிவில் இருந்த உருளைக்கிழங்கு மார்கெட் நீண்ட இடைவேளைக்கு தற்போது மீண்டு உச்சத்தை அடைந்துள்ளது. இன்று மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மொத்த ஏல மையத்தில் நடைபெற்ற ஏலத்தில் வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு ஆர்வத்துடன் ஏலம் எடுத்ததால் ரூ.1,700 முதல் ரூ.1, 800 வரை விலை போவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி உருளைக்கிழங்கு வரத்து குறைவாக இருந்தாலும் கிழங்கு ஏற்றுமதி அதிகரிக்கப்பட்டதால், தற்போது நீலகிரி உருளைக்கிழங்கிற்கு உரிய விலை கிடைத்து வருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர். மேலும், எதிர்வரும் காலங்களில் மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாகவும், நீண்ட இடைவேளைக்குப் பிறகு உருளைக்கிழங்கிற்கு மீண்டும் மவுசு கூடியிருப்பதால் அதன் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பயிர் செய்யப்படும் மலைக்காய்கறிகள் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்குக் கொண்டு வரப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு, பின்னர் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் லாரிகள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக, நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்கு எப்போதும் தனிசுவையுடன் இருப்பதால் மார்கெட்டில் இதற்கென தனித்துவம் இருந்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் கடந்த மூன்று மாதங்களாக நீலகிரி உருளைக்கிழங்கிற்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் மிகவும் நஷ்டத்தை சந்தித்து வந்தனர். 45 கிலோ எடை கொண்ட ஒரு உருளைக்கிழங்கு மூட்டையின் விலை ரூ. 700 முதல் ரூ. 900 வரையே அதிகபட்சமாக விற்பனையானது. மேட்டுப்பாளையம் மொத்த மார்கெட்டிற்கு தினசரி 70 முதல் 80 லோடு உருளைக்கிழங்கு ஏல மையத்திற்கு கொண்டு வரப்படும். கடந்த சில மாதங்களாக அதன் நிலையற்ற விலை மற்றும் ஏற்றுமதியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக உற்பத்தி குறைந்து 10 லோடாக வரத்து வெகுவாக குறைந்து வந்தது. இதனிடையே, தொடர்ந்து சரிவில் இருந்த உருளைக்கிழங்கு மார்கெட் நீண்ட இடைவேளைக்கு தற்போது மீண்டு உச்சத்தை அடைந்துள்ளது. இன்று மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மொத்த ஏல மையத்தில் நடைபெற்ற ஏலத்தில் வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு ஆர்வத்துடன் ஏலம் எடுத்ததால் ரூ.1,700 முதல் ரூ.1, 800 வரை விலை போவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி உருளைக்கிழங்கு வரத்து குறைவாக இருந்தாலும் கிழங்கு ஏற்றுமதி அதிகரிக்கப்பட்டதால், தற்போது நீலகிரி உருளைக்கிழங்கிற்கு உரிய விலை கிடைத்து வருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர். மேலும், எதிர்வரும் காலங்களில் மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாகவும், நீண்ட இடைவேளைக்குப் பிறகு உருளைக்கிழங்கிற்கு மீண்டும் மவுசு கூடியிருப்பதால் அதன் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.