கோவையில் மாற்றுத் திறனாளியிடம் ரூ. 84 லட்சம் மோசடி செய்த நபர் கைது

கோவை : கோவையில் மாற்றுத்திறனாளி பெண் மற்றும் அவரது சகோதரிகளிடம் ரூ. 84 லட்சம் மோசடி செய்த நபரை கோவை மாநகர போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை : கோவையில் மாற்றுத்திறனாளி பெண் மற்றும் அவரது சகோதரிகளிடம் ரூ. 84 லட்சம் மோசடி செய்த நபரை கோவை மாநகர போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

கோவை மாநகர பீளமேடு லட்சுமிபுரத்தில் வசிப்பவர் லதா தங்கம். போலியோ நோயால் பாதிக்கப்பட்ட இவர் 2 கால்களையும் இழந்த மாற்றுத்திறனாளி ஆவார். இவருக்கு சாந்தி தங்கம், ராணி தங்கம், ஷுலா தங்கம், சுஜா தங்கம். இவர்களில் சாந்தி தங்கத்தின் மகன் ரிட்ரிக் மூலமாக அறிமுகமான சென்னையைச் சேர்ந்த ஜெயகார்த்திக் என்பவர் ஆன்-லைன் மூலம் வியாபாரம் செய்து வருவதாகவும், இதில் முதலீடு செய்தால் நல்ல இலாபம் ஈட்டித் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதன்பேரில், ரூ. 84 லட்சம் பெற்றுக் கொண்டு, சிறிது காலம் இலாபத் தொகையை லதா தங்கம் குடும்பத்திற்கு ஜெய் கார்த்திக் கொடுத்து வந்துள்ளார். 

இதையடுத்து, சிறிது நாட்களிலேயே சாந்தி தங்கத்திற்கு சொந்தமான காரை எடுத்துக் கொண்டு ஏமாற்றி சென்று விட்டார். பின்னர், இது தொடர்பாக கோவை மாநகர குற்றப்பிரிவில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் ஐபிஎஸ் மற்றும் குற்றப் பிரிவு துணை ஆணையாளர் பெருமாள் ஐபிஎஸ் அவர்களின் மேற்பார்வையில் உதவி ஆணையாளர் சந்திரசேகரன் மற்றும் ஆய்வாளர் நாகராஜ் தலைமையிலான போலீசார் ஜெய் கார்த்திகை கைது செய்தனர். கைது செய்த குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...