கோவை : கோவை மாவட்ட வேட்டை தடுப்பு காவலர்களுக்கான ஊதியப் பிரச்சனை நீடித்து வரும் நிலையில், மாவட்ட வன அதிகாரி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
கோவை : கோவை மாவட்ட வேட்டை தடுப்பு காவலர்களுக்கான ஊதியப் பிரச்சனை நீடித்து வரும் நிலையில், மாவட்ட வன அதிகாரி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் உள்ள 7 வனச்சரகத்திலும் மொத்தம் 136 வேட்டை தடுப்பு காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே வனத்துறையில் நிதிப்பற்றாக்குறை காரணமாக, இவர்களுக்கான ஊதியம் வழங்குவதில் இழுபறி ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான ஊதியம், வேட்டை தடுப்பு காவலர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. இதனால், அவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட வனத்துறை அதிகாரி வெங்கடேஷ் கூறுகையில், "விரைவில் அவர்களது வங்கிக் கணக்கில் ஊதியம் சென்றடைவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்," எனக் கூறினார்.
கோவை மாவட்டத்தில் உள்ள 7 வனச்சரகத்திலும் மொத்தம் 136 வேட்டை தடுப்பு காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே வனத்துறையில் நிதிப்பற்றாக்குறை காரணமாக, இவர்களுக்கான ஊதியம் வழங்குவதில் இழுபறி ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான ஊதியம், வேட்டை தடுப்பு காவலர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. இதனால், அவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட வனத்துறை அதிகாரி வெங்கடேஷ் கூறுகையில், "விரைவில் அவர்களது வங்கிக் கணக்கில் ஊதியம் சென்றடைவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்," எனக் கூறினார்.