கோவை : கோவையில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கொலை செய்யப்பட்ட திராவிடர் விடுதலை கழக நிர்வாகி பாரூக்கின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை : கோவையில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கொலை செய்யப்பட்ட திராவிடர் விடுதலை கழக நிர்வாகி பாரூக்கின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் திராவிடர் விடுதலை கழக நிர்வாகி பாரூக் என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கடவுள் மறுப்பு கொள்கை பேசியதற்காக 5 பேர் கொண்ட கும்பலால் அவர், உக்கடம் பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் பாரூக்கின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, பாரூக்கின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் இடைக்கால நிவாரணமாக தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும், ஒரு லட்ச ரூபாய் குழந்தைகள் இருவர் பெயரில் வங்கிக் கணக்கிலும், மனைவி மற்றும் பெற்றோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கிட வேண்டும் என நீதிபதி சக்திவேல் உத்தரவிட்டுள்ளார்.
கோவையில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் திராவிடர் விடுதலை கழக நிர்வாகி பாரூக் என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கடவுள் மறுப்பு கொள்கை பேசியதற்காக 5 பேர் கொண்ட கும்பலால் அவர், உக்கடம் பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் பாரூக்கின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, பாரூக்கின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் இடைக்கால நிவாரணமாக தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும், ஒரு லட்ச ரூபாய் குழந்தைகள் இருவர் பெயரில் வங்கிக் கணக்கிலும், மனைவி மற்றும் பெற்றோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கிட வேண்டும் என நீதிபதி சக்திவேல் உத்தரவிட்டுள்ளார்.