கோவையில் ஸ்கிம்மர் கருவி மூலம் திருடப்பட்ட பணத்தை தரக்கோரி வங்கியில் தனியார் நிறுவனத்தினர் உள்ளிருப்பு போராட்டம்

கோவை : கோவையில் தனியார் நிறுவனத்தின் நடப்பு கணக்கிலிருந்து கடந்த ஆண்டு ஸ்கிம்மர் கருவி மூலம் திருடப்பட்ட 80 ஆயிரம் ரூபாயை வங்கி நிர்வாகம் தராமல் காலதாமதம் செய்து வருவதால், அந்நிறுவன ஊழியர்கள் வங்கியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.


கோவை : கோவையில் தனியார் நிறுவனத்தின் நடப்பு கணக்கிலிருந்து கடந்த ஆண்டு ஸ்கிம்மர் கருவி மூலம் திருடப்பட்ட 80 ஆயிரம் ரூபாயை வங்கி நிர்வாகம் தராமல் காலதாமதம் செய்து வருவதால், அந்நிறுவன ஊழியர்கள் வங்கியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஸ்கிம்மர் கருவிகள் உதவியுடன் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் இருந்து கொள்ளை போகும் சம்பவங்கள் அரங்கேறி வந்தது. இப்படி நடைபெற்ற கொள்ளை சம்பவங்களால் லட்சக்கணக்கான ரூபாய்கள் பறிபோனது பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் பணங்கள் இதுவரை கிடைக்காதது பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், தனியார் நிறுவனம் நடத்தி வரும் ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் ஸ்கிம்மர் கருவி மூலம் திருடப்பட்ட பணங்கள் இன்னும் தனக்கு கிடைக்கவில்லை எனக் கூறி அவர் சார்ந்த வங்கியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்.



இது குறித்து ராஜேஸ் கூறியதாவது :- கடந்த ஆண்டு ஜூலை 26-ம் தேதி எனது ஏ.டி.எம்.மில் இருந்து 80 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்ததாக எனது செல்போனிற்கு குறுஞ்செய்தி வந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நான் உடனடியாக வங்கி மற்றும் காவல் ஆணையாளரிடம் புகார் அளித்தேன். இதனையடுத்து எனது பணம் மும்பையில் உள்ள ஒரு ஏ.டி.எம்.மில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். எனது பணம் குறித்து வங்கியிடம் கேட்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்ததையடுத்து, யுனைடெட் வங்கியை நாடி பலமுறை பணம் கேட்டேன். ஆனால், தொடர்ந்து அவர்கள் என்னைப் புறக்கணித்து வந்தனர். இதனால், எனது பணம் கிடைக்கும் வரை வங்கிக்குள் இருந்தே, பணி செய்து கொண்டே போராட்டத்தில் ஈடுபடுவேன், என தெரிவித்தார்.



பணத்தை பறிகொடுத்த வாடிக்கையாளர் அவர் நிறுவனத்தினருடன் சேர்ந்து வங்கியில் பணி செய்து கொண்டே தர்ணா போராட்டம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...