நீலகிரி : தமிழக - கேரள எல்லைப் பகுதியான கூடலூரில் நிபா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் விதமாக சுகாதாரப் பணிகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
நீலகிரி : தமிழக - கேரள எல்லைப் பகுதியான கூடலூரில் நிபா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் விதமாக சுகாதாரப் பணிகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி தமிழக - கேரள எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவியதாக வந்த தகவலையடுத்து, இங்குள்ள சோதனை சாவடியில் சுகாதார அதிகாரிகள் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். தற்போது, ராம்ஜான் பண்டிகை முடிந்த நிலையில், சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் இந்த வழியாக உதகை, குன்னூரில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு வருகின்றனர். இவர்களுக்கு நிபா வைரஸ் குறித்து விழிப்புணர்வும், அதனை எவ்வாறு தடுப்பது என்பது பற்றி துண்டறிக்கையும் வழங்கப்படுகிறது.

மேலும், சாலையோரங்களில் விற்கப்படும் பழங்களை வாங்கும் போது, அந்த பழத்தை நன்றாகக் கழுவிய பின்பு உண்ண வேண்டும் என்றும், ஏதாவது பறவைகள் பழத்தை உட்கொண்ட அறிகுறி தெரிந்தால் அதை உண்ண வேண்டாம் என சுற்றுலாப் பயணிகளுக்கு சுகாதார அதிகாரிகள் விளக்கினர். இப்பகுதியில் உள்ள 7 சோதனை சாவடியிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இதில், மருத்துவக் குழு, சுகாதாரக் குழு, வருவாய் துறையினர் என பலரும் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி தமிழக - கேரள எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவியதாக வந்த தகவலையடுத்து, இங்குள்ள சோதனை சாவடியில் சுகாதார அதிகாரிகள் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். தற்போது, ராம்ஜான் பண்டிகை முடிந்த நிலையில், சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் இந்த வழியாக உதகை, குன்னூரில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு வருகின்றனர். இவர்களுக்கு நிபா வைரஸ் குறித்து விழிப்புணர்வும், அதனை எவ்வாறு தடுப்பது என்பது பற்றி துண்டறிக்கையும் வழங்கப்படுகிறது.

மேலும், சாலையோரங்களில் விற்கப்படும் பழங்களை வாங்கும் போது, அந்த பழத்தை நன்றாகக் கழுவிய பின்பு உண்ண வேண்டும் என்றும், ஏதாவது பறவைகள் பழத்தை உட்கொண்ட அறிகுறி தெரிந்தால் அதை உண்ண வேண்டாம் என சுற்றுலாப் பயணிகளுக்கு சுகாதார அதிகாரிகள் விளக்கினர். இப்பகுதியில் உள்ள 7 சோதனை சாவடியிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இதில், மருத்துவக் குழு, சுகாதாரக் குழு, வருவாய் துறையினர் என பலரும் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.