நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், இயற்கை உரம் தயாரிக்க மாவட்ட நிர்வாகம் ஊக்கப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.
நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், இயற்கை உரம் தயாரிக்க மாவட்ட நிர்வாகம் ஊக்கப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.
நீலகிரியில் உள்ள விவசாயிகள், இயற்கை விவசாயத்துக்கு மாறி வருகின்றனர். விளைபொருட்கள் உற்பத்திக்கு, பெரும்பாலும் ரசாயன இடு பொருட்களைப் பயன்படுத்தியதால் மண்வளம் பாதிக்கப்பட்டு வருவதை அறிந்த விவசாயிகள், இதிலிருந்து மீண்டு மண்வளம் மற்றும் விவசாய நிலத்தைப் பாதுகாக்க, இயற்கை முறையில் காய்கறி, உற்பத்திக்கு மாறி வருகின்றனர். இயற்கை விவசாயத்துக்கு மாறும் வகையில், விவசாய நிலங்களைப் பதப்படுத்தி, உயிர் உரமாக சாண உரம் மற்றும் மண்புழு உரம் இவற்றைப் பயன்படுத்த துவங்கியுள்ளனர். ரசாயன உர பயன்பாட்டால், மண்ணின் தன்மை மாறி வருவதுடன், மகசூல் உற்பத்தியும் குறைந்து வருகிறது. இதற்கு மாற்றாக ரசாயன உரத்தை குறைத்து, மீண்டும் இயற்கை உரங்களைப் பயன்படுத்தும் முயற்சியில் விவசாயிகள் இறங்கி வருகின்றனர்.

இது குறித்து தோட்டக்கலை துறையினர் கூறுகையில், "விவசாயிகளை இயற்கை விவசாயத்துக்கு மாற்றுவதைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறோம். தோட்டக்கலைத் துறை சார்பில் பல்வேறு விவசாய திட்டங்கள் மூலம் பயன்பெறும் விவசாயிகளுக்கு, தேவையான இயற்கை உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இயற்கை இடுபொருட்கள் தேவையுள்ளவர்கள், விவசாய நிலத்தின் பட்டா, சிட்டா நகலுடன் எங்களிடம் விண்ணப்பித்தால், அரசு திட்டம் மூலம், இயற்கை இடு பொருட்கள், மானிய விலையில் வழங்கப்படும், என்றனர்.

நீலகிரியில் உள்ள விவசாயிகள், இயற்கை விவசாயத்துக்கு மாறி வருகின்றனர். விளைபொருட்கள் உற்பத்திக்கு, பெரும்பாலும் ரசாயன இடு பொருட்களைப் பயன்படுத்தியதால் மண்வளம் பாதிக்கப்பட்டு வருவதை அறிந்த விவசாயிகள், இதிலிருந்து மீண்டு மண்வளம் மற்றும் விவசாய நிலத்தைப் பாதுகாக்க, இயற்கை முறையில் காய்கறி, உற்பத்திக்கு மாறி வருகின்றனர். இயற்கை விவசாயத்துக்கு மாறும் வகையில், விவசாய நிலங்களைப் பதப்படுத்தி, உயிர் உரமாக சாண உரம் மற்றும் மண்புழு உரம் இவற்றைப் பயன்படுத்த துவங்கியுள்ளனர். ரசாயன உர பயன்பாட்டால், மண்ணின் தன்மை மாறி வருவதுடன், மகசூல் உற்பத்தியும் குறைந்து வருகிறது. இதற்கு மாற்றாக ரசாயன உரத்தை குறைத்து, மீண்டும் இயற்கை உரங்களைப் பயன்படுத்தும் முயற்சியில் விவசாயிகள் இறங்கி வருகின்றனர்.

இது குறித்து தோட்டக்கலை துறையினர் கூறுகையில், "விவசாயிகளை இயற்கை விவசாயத்துக்கு மாற்றுவதைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறோம். தோட்டக்கலைத் துறை சார்பில் பல்வேறு விவசாய திட்டங்கள் மூலம் பயன்பெறும் விவசாயிகளுக்கு, தேவையான இயற்கை உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இயற்கை இடுபொருட்கள் தேவையுள்ளவர்கள், விவசாய நிலத்தின் பட்டா, சிட்டா நகலுடன் எங்களிடம் விண்ணப்பித்தால், அரசு திட்டம் மூலம், இயற்கை இடு பொருட்கள், மானிய விலையில் வழங்கப்படும், என்றனர்.
