சேலம் : சேலம் - சென்னை இடையே 8 வழிச்சாலை திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சேலம் : சேலம் - சென்னை இடையே 8 வழிச்சாலை திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் ரூ. 320 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் ஈரடுக்கு மேம்பாலத்தில் ஒரு தளத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை திறந்து வைத்தார். இன்னும் 6 மாத காலத்துக்குள் இரண்டாம் தளமும் திறக்கப்படும் எனத் தெரிகிறது. இந்த விழாவில், தி.மு.க. எம்.பி., எஸ்.ஆர். பார்த்திபன், சேலம் வடக்கு தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது :- நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் நல்ல தீர்ப்பு வந்தவுடன் 8 வழிச் சாலை திட்டம் நிறைவேற்றப்படும். எந்த ஒரு தனிநபருக்காகவும் 8 வழிச்சாலை திட்டம் கொண்டு வரப்படவில்லை. உலகத்தரத்திற்கு ஏற்ப சாலைகளை அமைக்கவே மத்திய அரசு 8 வழிசாலை திட்டத்தை அறிவித்தது. மக்களின் வசதிக்காகவே 8 வழி சாலைத் திட்டம். வளர்ச்சி, மேம்பாடு, சாலை விபத்துகளை தடுக்கவே 8 வழி சாலை திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. யாருடைய நிலத்தைப் பறித்தும் அரசு திட்டத்தை நிறைவேற்றாது. எதிர்ப்பு தெரிவிப்பவர்களை சமாதானப்படுத்தியே திட்டம் நிறைவேற்றப்படும்.

தமிழகம் சாலை வசதிகளில் முதன்மை மாநிலமாகத் திகழும். சேலத்துக்கு அருகே 60 ஏக்கர் நிலப்பரப்பளவில் பஸ்போர்ட் அமைக்க திட்ட அறிக்கை தயாராகிப்பட்டு வருகிறது. தமிழகத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.