7 ஆண்டுகளாக எஸ்.ஐ.எச்.எஸ். காலனி மேம்பாலத்தைக் கட்டி முடிக்கப்படாதததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் : 500-க்கும் மேற்பட்டோர் கைது

கோவை : சிங்காநல்லூர் ரயில்வே உயர்மட்ட மேம்பாலப் பணிகளை உடனடியாக முடிக்கக் கோரி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை : 7 ஆண்டுகளாக கட்டி முடிக்கப்படாமல் உள்ள கோவை எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தை விரைவில் கட்டி முடிக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். 



கோவை சிங்காநல்லூரை அடுத்த எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் 23 கோடி ரூபாய் மதிப்பில் ரயில்வே மேல்பாலம் கட்டும் பணி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கியது. சர்வீஸ் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தாமல் பாலம் கட்டுமானப்பணி துவங்கியதால், உரிய இழப்பீடு கோரி பாதிக்கப்பட்ட மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில், நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததால் பாலம் கட்டும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. 7 ஆண்டுகளாக பாலம் கட்டும் பணி முடிவடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாலக் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி எஸ்.ஐ.எச்.எஸ் காலனி அருகே மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில், மேம்பாலக் கட்டும் பணி தாமதப்படுவதால் பொதுமக்கள் பல்வேறு சிரமத்திற்கு உள்ளதாகவும், விரைவில் பாலத்தைக் கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர். 



தி.மு.க. காலத்தில் கொண்டு வரப்பட்ட பாலம் என்பதால், அரசு இந்த பாலம் கட்டுவதில் அக்கறை காட்டாமல் இருப்பதாகக் குற்றம்சாட்டியவர்கள், சர்வீஸ் சாலை அமைப்பது தொடர்பாக வழக்கு தொடர்ந்தவர்களை அரசு தரப்பில் அழைத்து பேசி உரிய தீர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். 15 நாட்களுக்குள் ரயில்வே மேம்பாலம் கட்டும்பணி துவங்காவிட்டால் அடுத்தகட்ட போராட்டம் தீவிரப்படுத்தப்படும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். 



இதனிடையே, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், சிங்காநல்லூர் எம்.எல்.ஏ. கார்த்திக் மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தொண்டர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...