கோவை : கோவையில் பிக்கி புளோ சார்பில் மில்லியன் சீதா என்ற நாட்டிய நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
கோவை : கோவையில் பிக்கி புளோ சார்பில் மில்லியன் சீதா என்ற நாட்டிய நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்திய வரலாற்றின் மரபணுவில் இருப்பது இதிகாசமான ராமாயணம். இந்த காவியம் தொடர்பாக, மில்லியன் சீதா நிகழ்ச்சி இன்று கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. அரங்கில் நடைபெற்றது.

ராமாயணத்தில் நிபுணத்துவம் கொண்ட அனிதா ரத்னத்தின் பாடல்கள், நடனம், உரைநடை ஆகியவற்றின் ராமாயணத்தின் உண்மையான கதாநாயகியான சீதாவின் சிறப்பம்சங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

ஒரு இளவரசியாக தனது வாழ்க்கையை துவங்கிய சீதா, தந்தைக்கு மகளாக, நாட்டின் ராணியாக, இரு குழந்தைகளின் தாயாக, ராமரின் மனைவியாக என பல அவதாரங்களை எடுத்து, சாதாரண குடும்பப் பெண்கள் படும் அனைத்துவிதமான துன்பங்களையும் எதிர்கொண்டு வாழ்க்கையில் எப்படி வெற்றி பெற்றார் என்பது குறித்து அனிதா ரத்னம் விளக்கம் அளித்தார்.

ராமாயணத்தில் சீதாவின் பங்கை மையமாகக் கொண்டு, மகளிர் வாழ்வில் எப்படி முன்னேற வேண்டும் என மில்லியன் சீதா நிகழ்வு மூலமாக எடுத்துரைக்கப்பட்டது.


இந்திய வரலாற்றின் மரபணுவில் இருப்பது இதிகாசமான ராமாயணம். இந்த காவியம் தொடர்பாக, மில்லியன் சீதா நிகழ்ச்சி இன்று கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. அரங்கில் நடைபெற்றது.

ராமாயணத்தில் நிபுணத்துவம் கொண்ட அனிதா ரத்னத்தின் பாடல்கள், நடனம், உரைநடை ஆகியவற்றின் ராமாயணத்தின் உண்மையான கதாநாயகியான சீதாவின் சிறப்பம்சங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

ஒரு இளவரசியாக தனது வாழ்க்கையை துவங்கிய சீதா, தந்தைக்கு மகளாக, நாட்டின் ராணியாக, இரு குழந்தைகளின் தாயாக, ராமரின் மனைவியாக என பல அவதாரங்களை எடுத்து, சாதாரண குடும்பப் பெண்கள் படும் அனைத்துவிதமான துன்பங்களையும் எதிர்கொண்டு வாழ்க்கையில் எப்படி வெற்றி பெற்றார் என்பது குறித்து அனிதா ரத்னம் விளக்கம் அளித்தார்.

ராமாயணத்தில் சீதாவின் பங்கை மையமாகக் கொண்டு, மகளிர் வாழ்வில் எப்படி முன்னேற வேண்டும் என மில்லியன் சீதா நிகழ்வு மூலமாக எடுத்துரைக்கப்பட்டது.
