நீலகிரி : நீலகிரியில் மாணவர்கள் குறைவாக உள்ள அரசு ஆரம்பப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளை மூடும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நாசருதீன் தெரிவித்துள்ளார்.
நீலகிரி : நீலகிரியில் மாணவர்கள் குறைவாக உள்ள அரசு ஆரம்பப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளை மூடும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நாசருதீன் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சில பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கின்ற காரணத்தினால், அந்தப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களை வேறு பள்ளியுடன் இணைத்து ஒரே பள்ளியாக செயல்படுத்துவதோடு, மீதமுள்ள சில அரசுப் பள்ளிகளை மூடுவதாக தகவல்கள் வெளிவந்தன.

இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நாசருதீனிடம் கேட்டபோது, "குறைவாக உள்ள மாணவர்களைக் கொண்ட பள்ளிகளில் கூடுதலாக மாணவர்களை சேர்ப்பதற்கு வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் வரை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அந்தப் பணிகள் நிறைவுற்ற பிறகு பள்ளிகளை இணைப்பது குறித்து முடிவெடுக்கப்படும்," எனத் தெரிவித்தார்.
இது குறித்து குன்னூர் கல்வி மாவட்ட அதிகாரி அம்பிகாபதி கூறுகையில், "ஆரம்ப பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும். நடுநிலைப் பள்ளிகளில் 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும், மேல்நிலைப் பள்ளிகளில் 40 பேருக்கு ஒரு ஆசிரியரும், மேலும் அனைத்து பள்ளிகளிலும் ஒரு தலைமை ஆசிரியர் இருப்பது அவசியம் என அரசு விதிகள் உள்ளன. ஆனால், சில அரசு பள்ளிகளில் 5-க்கும் குறைவான மாணவர்கள் இருப்பதால், இவற்றில் கூடுதல் மாணவர்களைச் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்கிறோம். குறைவாக மாணவர்களைக் கொண்ட கிராமப்புற பள்ளிகளை வேறு அரசு பள்ளிகளுடன் இணைக்கும் போது, போக்குவரத்து பிரச்சினைகள் இருப்பதால், இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு செய்து வருகிறார்," எனத் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சில பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கின்ற காரணத்தினால், அந்தப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களை வேறு பள்ளியுடன் இணைத்து ஒரே பள்ளியாக செயல்படுத்துவதோடு, மீதமுள்ள சில அரசுப் பள்ளிகளை மூடுவதாக தகவல்கள் வெளிவந்தன.

இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நாசருதீனிடம் கேட்டபோது, "குறைவாக உள்ள மாணவர்களைக் கொண்ட பள்ளிகளில் கூடுதலாக மாணவர்களை சேர்ப்பதற்கு வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் வரை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அந்தப் பணிகள் நிறைவுற்ற பிறகு பள்ளிகளை இணைப்பது குறித்து முடிவெடுக்கப்படும்," எனத் தெரிவித்தார்.
இது குறித்து குன்னூர் கல்வி மாவட்ட அதிகாரி அம்பிகாபதி கூறுகையில், "ஆரம்ப பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும். நடுநிலைப் பள்ளிகளில் 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும், மேல்நிலைப் பள்ளிகளில் 40 பேருக்கு ஒரு ஆசிரியரும், மேலும் அனைத்து பள்ளிகளிலும் ஒரு தலைமை ஆசிரியர் இருப்பது அவசியம் என அரசு விதிகள் உள்ளன. ஆனால், சில அரசு பள்ளிகளில் 5-க்கும் குறைவான மாணவர்கள் இருப்பதால், இவற்றில் கூடுதல் மாணவர்களைச் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்கிறோம். குறைவாக மாணவர்களைக் கொண்ட கிராமப்புற பள்ளிகளை வேறு அரசு பள்ளிகளுடன் இணைக்கும் போது, போக்குவரத்து பிரச்சினைகள் இருப்பதால், இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு செய்து வருகிறார்," எனத் தெரிவித்தார்.