கோவை : கோவை மாவட்டத்தில் 5 நாட்கள் நடக்கும் தொழிற்கண்காட்சி 'இன்டெக் 2019' கொடிசியா மைதானத்தில் இன்று தொடங்கியது.
கோவை : கோவை மாவட்டத்தில் 5 நாட்கள் நடக்கும் தொழிற்கண்காட்சி 'இன்டெக் 2019' கொடிசியா மைதானத்தில் இன்று தொடங்கியது.

இந்தியாவின் 2-வது மிகப்பெரிய தொழிற்கண்காட்சியாக 19-வது இன்டெக் கண்காட்சி கொடிசியா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் 10-ம் தேதி நடைபெறும் இந்த தொழிற்கண்காட்சியை சிறப்பு விருந்தினர்களான சைகுயிரெக்ஸ் தலைவர் பத்மஸ்ரீ எம்.கே. நாராயணன் மற்றும் டிஜிட்டல் டெக்னாலஜி லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் உதயந்த் மல்கோத்ரா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்தக் கண்காட்சியில் ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி, சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனத்தினர் தங்களது நிறுவன தயாரிப்புகளை அரங்குகள் அமைத்து பார்வைக்கு வைத்துள்ளனர். 5 நாட்கள் நடக்கும் இந்த கண்காட்சியை சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான வர்த்தகர்கள் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

"இந்தக் கண்காட்சியின் முதல் நாளிலேயே நல்ல வரவேற்பு உள்ளது. கண்காட்சியின் கடைசி நாளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பார்வையிடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது," என்கின்றனர் ஒருங்கிணைப்பாளர்கள்.

இந்தியாவின் 2-வது மிகப்பெரிய தொழிற்கண்காட்சியாக 19-வது இன்டெக் கண்காட்சி கொடிசியா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் 10-ம் தேதி நடைபெறும் இந்த தொழிற்கண்காட்சியை சிறப்பு விருந்தினர்களான சைகுயிரெக்ஸ் தலைவர் பத்மஸ்ரீ எம்.கே. நாராயணன் மற்றும் டிஜிட்டல் டெக்னாலஜி லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் உதயந்த் மல்கோத்ரா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்தக் கண்காட்சியில் ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி, சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனத்தினர் தங்களது நிறுவன தயாரிப்புகளை அரங்குகள் அமைத்து பார்வைக்கு வைத்துள்ளனர். 5 நாட்கள் நடக்கும் இந்த கண்காட்சியை சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான வர்த்தகர்கள் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

"இந்தக் கண்காட்சியின் முதல் நாளிலேயே நல்ல வரவேற்பு உள்ளது. கண்காட்சியின் கடைசி நாளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பார்வையிடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது," என்கின்றனர் ஒருங்கிணைப்பாளர்கள்.