நீலகிரி : உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு குன்னூர் பேருந்து நிலையத்தை ஒட்டி ஓடும் ஆற்றில் உள்ள கழிவுகளை கிளீன் குன்னூர் அமைப்பு சார்பில் சுத்தம் செய்யப்பட்டது. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.
நீலகிரி : உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு குன்னூர் பேருந்து நிலையத்தை ஒட்டி ஓடும் ஆற்றில் உள்ள கழிவுகளை கிளீன் குன்னூர் அமைப்பு சார்பில் சுத்தம் செய்யப்பட்டது. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.
கிளீன் குன்னூர் என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் பல்வேறு சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, குன்னூர் ஆற்றில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

தூய்மைப் பணிகளுக்கு கிளீன் குன்னூர் அமைப்பின் அமைப்பாளர் சமந்தா அய்யண்ணா கூறியதாவது :- நீலகிரியில் நீர் ஆதாரங்கள் அழிந்து வருவது, 96 சதவீதம் விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதால் மண்வளம் பாதிப்பு, இந்த ஆண்டு வரலாறு காணாத காட்டு தீயால் காற்று மாசு அடைந்துள்ளது. அதிக அளவு கட்டிடங்கள் காரணமாகவும், நீலகிரியில் உள்ள வனங்கள் வேகமாக அழிந்து வருவது கவலை அளிக்கிறது. மண் வளம் பாதிக்கப்பட்டு சிறு, சிறு மழைகள் பெய்தால் கூட நிலச்சரிவு, மண்சரிவு ஏற்பட்டு வருவது அதிகரித்துள்ளது.
இதனிடையே, இன்று உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், குன்னூர் பேருந்து நிலையத்தை ஒட்டி ஓடும் ஆற்றில் பல்வேறு குப்பைகள் இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள் கொட்டப்படுவதால் மிகப்பெரிய அளவில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இவ்வழியாக பயணிப்போர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு இந்த ஆற்றினை தூய்மை செய்யும் பணியைத் தொடங்கியுள்ளது. இப்பணி பர்லியார் பகுதி வரை நீடிக்கும், என்றார்.
இந்த தூய்மைப் பணியில் மருத்துவர் வசந்தன், பிரசன்னன் மப்சாவன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
கிளீன் குன்னூர் என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் பல்வேறு சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, குன்னூர் ஆற்றில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

தூய்மைப் பணிகளுக்கு கிளீன் குன்னூர் அமைப்பின் அமைப்பாளர் சமந்தா அய்யண்ணா கூறியதாவது :- நீலகிரியில் நீர் ஆதாரங்கள் அழிந்து வருவது, 96 சதவீதம் விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதால் மண்வளம் பாதிப்பு, இந்த ஆண்டு வரலாறு காணாத காட்டு தீயால் காற்று மாசு அடைந்துள்ளது. அதிக அளவு கட்டிடங்கள் காரணமாகவும், நீலகிரியில் உள்ள வனங்கள் வேகமாக அழிந்து வருவது கவலை அளிக்கிறது. மண் வளம் பாதிக்கப்பட்டு சிறு, சிறு மழைகள் பெய்தால் கூட நிலச்சரிவு, மண்சரிவு ஏற்பட்டு வருவது அதிகரித்துள்ளது.
இதனிடையே, இன்று உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், குன்னூர் பேருந்து நிலையத்தை ஒட்டி ஓடும் ஆற்றில் பல்வேறு குப்பைகள் இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள் கொட்டப்படுவதால் மிகப்பெரிய அளவில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இவ்வழியாக பயணிப்போர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு இந்த ஆற்றினை தூய்மை செய்யும் பணியைத் தொடங்கியுள்ளது. இப்பணி பர்லியார் பகுதி வரை நீடிக்கும், என்றார்.
இந்த தூய்மைப் பணியில் மருத்துவர் வசந்தன், பிரசன்னன் மப்சாவன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.