காட்டுத்தீ மற்றும் அதிகளவு கட்டிடங்களால் நீலகிரி அழிந்து வருகிறது : மத்திய அரசின் மண் மற்றும் நீர் ஆராய்ச்சியாளர் தகவல்

நீலகிரி : இந்த ஆண்டு ஏற்பட்ட வரலாறு காணாத காட்டு தீயால் காற்று மாசுபாடு அடைந்துள்ளதாகவும், அதிக அளவு கட்டிடங்கள் காரணமாகவும் நீலகிரி வேகமாக அழிந்து வருவதாக மத்திய அரசின் மண் மற்றும் நீர் ஆராய்ச்சியாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி : இந்த ஆண்டு ஏற்பட்ட வரலாறு காணாத காட்டு தீயால் காற்று மாசுபாடு அடைந்துள்ளதாகவும், அதிக அளவு கட்டிடங்கள் காரணமாகவும் நீலகிரி வேகமாக அழிந்து வருவதாக மத்திய அரசின் மண் மற்றும் நீர் ஆராய்ச்சியாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

பசுமை நிறைந்த காடுகள், காணும் இடம் எல்லாம் வான் உயர்ந்த மரங்கள், நீர் அருவிகள், மேகமூட்டம் என குளுகுளு மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்தால்தான் சமவெளி பகுதியான ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் விவசாயம் செய்ய முடியும். ஆனால், சில வருடகாலமாக நீலகிரி மலைகள் அழிக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்படுவதாலும், நீலகிரியில் 96 சதவீதம் விவசாயிகள் பூச்சி கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதால், மண்வளம் பாதிக்கப்பட்டு சிறுசிறு மழைகள் பெய்தால் கூட நிலச்சரிவு மற்றும் மண்சரிவு ஏற்படுவது அதிகரித்துள்ளது. இத்துடன் மரங்கள் 22 சதவீதம் வெட்டி அழிக்கப்பட்டதாலும், இந்த ஆண்டு வரலாறு காணாத காட்டுத்தீ ஏற்பட்ட காரணத்தாலும் அதிகளவு காற்று மாசு அடைந்திருப்பது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.



இதனிடையே, இன்று உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், உதகையில் உள்ள மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி அலுவலகத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. 

அப்போது, சுற்றுச்சூழல் தினம் குறித்து மண் மற்றும் நீர்வளம் ஆராய்ச்சி நிலையத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் மணிவண்ணன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கையில், "நீலகிரி மாவட்டம் ஆண்டுக்கு ஆண்டு வேகமாக அழிந்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் மிகவும் முக்கிய மலைத் தொடராக உள்ள நீலகிரியில் மண் அரிப்பு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. மேலும், அதிக அளவு ஏற்பட்ட காட்டுத்தீயினால் காற்று மாசுபாடு அடைகிறது. அதோடு, அரிய வகை மரங்கள் அழிக்கப்பட்ட காரணத்தால் நீலகிரி வேகமாக அழிந்து வருகிறது," என்றார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...