கோவை : கோவையில் அனுமதியின்றி செயல்படும் சொகுசு விடுதிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்துள்ளார்.
கோவை : கோவையில் அனுமதியின்றி செயல்படும் சொகுசு விடுதிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது :- கோவை மாவட்டம், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் எளிதில் அணுகக்கூடியதும், சுற்றுலாப் பயணிகள் விரும்பக்கூடிய பகுதியாகவும் கலச்சாரம் மிக்க பகுதியாகவும் விளங்கி வருகிறது. மேலும், சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சொகுசு விடுதிகள் உணவகங்கள் மற்றும் பண்ணை வீடுகள், விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அவ்வாறு அமையப் பெற்றுள்ள அனைத்து வகையிலான தங்கும் விடுதிகள் விதிமுறைகளின்படி அமையப் பெற்றிருக்க வேண்டும். முறையான அனுமதி பெற்றிருப்பதுடன், அனுமதி பெற்றுள்ள விடுதிகள் உரியகாலத்தில் தங்களின் அனுமதி புதுப்பிக்கப்பட்டுள்ளனவா என்பதையும் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். மேலும், சொகுசு விடுதிகளுக்கு அருகில் வசிப்பவர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையிலும் நெறிமுறைகளை மீறாமலும், விடுதிகள் செயல்படுவதை உரிமையாளர்கள் உறுதி செய்திடல் வேண்டும்.
இந்த நிலையில், அனுமதியின்றி நடத்தப்படும் விடுதிகளை கணக்கெடுத்து ஆய்வு செய்திட வட்ட அளவில் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், நகராட்சி ஆணையர், பேரூராட்சி அலுவலர்கள், காவல் ஆய்வாளர் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. களஆய்வின் போது முறையான அனுமதி பெறாத சொகுசு விடுதிகள் கண்டறியப்படும் நிலையில், சட்டப்படி அந்த விடுதிகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அந்த உரிமையாளர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது :- கோவை மாவட்டம், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் எளிதில் அணுகக்கூடியதும், சுற்றுலாப் பயணிகள் விரும்பக்கூடிய பகுதியாகவும் கலச்சாரம் மிக்க பகுதியாகவும் விளங்கி வருகிறது. மேலும், சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சொகுசு விடுதிகள் உணவகங்கள் மற்றும் பண்ணை வீடுகள், விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அவ்வாறு அமையப் பெற்றுள்ள அனைத்து வகையிலான தங்கும் விடுதிகள் விதிமுறைகளின்படி அமையப் பெற்றிருக்க வேண்டும். முறையான அனுமதி பெற்றிருப்பதுடன், அனுமதி பெற்றுள்ள விடுதிகள் உரியகாலத்தில் தங்களின் அனுமதி புதுப்பிக்கப்பட்டுள்ளனவா என்பதையும் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். மேலும், சொகுசு விடுதிகளுக்கு அருகில் வசிப்பவர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையிலும் நெறிமுறைகளை மீறாமலும், விடுதிகள் செயல்படுவதை உரிமையாளர்கள் உறுதி செய்திடல் வேண்டும்.
இந்த நிலையில், அனுமதியின்றி நடத்தப்படும் விடுதிகளை கணக்கெடுத்து ஆய்வு செய்திட வட்ட அளவில் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், நகராட்சி ஆணையர், பேரூராட்சி அலுவலர்கள், காவல் ஆய்வாளர் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. களஆய்வின் போது முறையான அனுமதி பெறாத சொகுசு விடுதிகள் கண்டறியப்படும் நிலையில், சட்டப்படி அந்த விடுதிகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அந்த உரிமையாளர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.