பொள்ளாச்சி கெடுமேடு வாய்க்காலில் கார் கவிழ்ந்து உயிரிழந்த 8 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம்

கோவை : பொள்ளாச்சி அருகே கெடுமேடு வாய்க்காலில் கார் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணமாக வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கோவை : பொள்ளாச்சி அருகே கெடுமேடு வாய்க்காலில் கார் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணமாக வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், கோலார்பட்டி கிராமம் - தேசிய நெடுஞ்சாலை கெடுமேடு அருகில் கார் விபத்துக்குள்ளாகி வாய்க்காலில் கவிழ்ந்ததில், காரில் பயணம் செய்த கோவை தெற்கு வட்டம் மசக்காளிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ், அவருடையை மனைவி சித்ரா, குழந்தைகள் நந்தனா, சித்ரா மற்றும் பன்னீர்செல்வம் என்பவரின் மனைவி லதா, அவருடைய குழந்தைகள் செல்வன் கவியரசு, தாரணி மற்றும் சுப்பிரமணியம் என்பவரின் மனைவி சுமதி ஆகிய 8 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரம் அடைந்தேன். 

சாலை விபத்தில் உயிரிழந்த மேற்கண்ட 8 பேரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கண்ட துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 8 நபர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன், என குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...