உலக சுற்றுச்சூழல் தினம் : முன்பு உதகையின் தட்பவெப்ப நிலையைக் கொண்ட நகராக இருந்த கோவையில், இனிமேல்...! - கோவை ஆட்சியர்

கோவை : சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வெள்ளலூர் குப்பை கிடங்கில் முதற்கட்டமாக இன்று 1,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.


கோவை : சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வெள்ளலூர் குப்பை கிடங்கில் முதற்கட்டமாக இன்று 1,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.



உலகம் முழுவதும் சர்வதேச சுற்றுச்சூழல் தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் சிறுதுளி அமைப்பின் சார்பில், வெள்ளலூர் குப்பை கிடங்கில் மரக்கன்றுகளை நடும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு உரையாற்றினார். 



அப்போது, அவர் கூறியதாவது :- கோவை மாவட்டம் முன்பு சமவெளிப் பகுதியைக் கொண்ட உதகையாக இருந்தது. ஆனால், தற்போது பிற நகரங்களைப் போல தட்பவெப்ப நிலை மாறிவிட்டது. கோவையின் தட்பவெப்ப நிலை மாறுவதற்கு பல்வேறு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. எனவே, கோவையில் மீண்டும் பழைய தட்பவெப்ப நிலை திரும்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும். மொத்தம் 645 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த வெள்ளலூர் குப்பை கிடங்கில் குறைந்தது 100 ஏக்கரிலாவது பசுமையை உருவாக்க வேண்டும். மாணவர்களும் சுற்றுச்சூழலை பற்றி தெரிந்து கொள்ள முன்வர வேண்டும், எனக் கூறினார். 



தொடர்ந்து, கோவை மாநகராட்சி ஆணையர் ஜே. ஸ்ரவன் குமார் கூறுகையில், "கோவை மாநகரைச் சேர்ந்த ஒவ்வொரு குடிமகனும், நகரை பசுமையாக மாற்ற தங்களது சிறு பங்களிப்பை அளிக்க வேண்டும். அவரவர் வீடுகளில் கழிவு மேலாண்மையை தொடங்க வேண்டும். வீடுகளில் கழிவுகளை பிரித்தெடுக்கும் முறையை தொடங்கினால், கழிவுகளை எளிதில் அழிக்க முடியும். எனவே, அனைவரும் ஒன்றிணைந்து கோவை மாநகரை பசுமை நகரமாக மாற்ற பாடுபடவேண்டும்," என்றார். 



சிறுதுளியைச் சேர்ந்த சுஜினி பாலு கூறுகையில், "சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கைகளை மேற்கொண்ட கோவை மாநகராட்சி மற்றும் கோவை மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சிறுதுளி அமைப்பு எப்போதும் கோவையை பசுமையாக மாற்ற தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்கும். தற்போது, முதற்கட்டமாக, வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 1,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகின்றன," எனக் கூறினார். 



இந்த நிகழ்ச்சியில் அதிவிரைவு படை, நம்ம கோவை, போஸ்ச் நிறுவனம், இசட்.எஃப். நிறுவனம், ஸ்ரீ கிருஷ்ணா, கேசிடி, ரத்தினம் ஆகிய கல்லூரிகளின் மாணவர்கள், கோத்ரேஜ் நிறுவனத்தினர், பப்லா கூட்டமைப்பினர், எஸ்.பி.எம். அம்பாஸிடர்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...