கோவை ரயில்நிலையத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிப்பு

கோவை : உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவை ரயில்நிலையத்திற்கு வந்த பயணிகளிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கோவை : உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவை ரயில்நிலையத்திற்கு வந்த பயணிகளிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 



கோவை ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே ஊழியர்கள், அறம் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள், ரூட்ஸ் நிறுவன ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். பின்னர், ரயில்நிலையத்தின் நடைபாதைகளில் நடந்த பேரணியின் மூலம், மரம் வளர்ப்பதன் அவசியம், பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும், தூய்மையான கோவையை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகளை ரயில் பயணிகளிடத்தில் ஏற்படுத்தினர். தொடர்ந்து, ஆர்.பி.எஸ். அலுவலகம் அருகே மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டனர்.



மேலும், பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ரயில்நிலையத்தின் முன்பு பாரம்பரிய இசைகளை வாசித்தனர். அப்போது, கோவை ரயில்நிலைய வளாகத்தை தூய்மையாக வைக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அங்கு கிடந்த குப்பைகளை சேகரித்தனர். 



இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, உலக சுற்றுச்சூழல் தினத்தை வலியுறுத்தும் பொருட்டு மாணவர்களுக்கான ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் சிறந்த தருணமாக, நகரை தூய்மைப்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வரும் துப்புரவு பணியாளர்களுக்கு ரோஜா பூவை கொடுத்து தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...