Breaking: கோவையில் கர்ப்பிணிக்கு வாட்ஸ்அப் மூலம் அளித்த சிகிச்சையால் உயிருக்கு ஆபத்தான நிலையில் குழந்தை : தனியார் மருத்துவரின் செயலைக் கண்டித்து உறவினர்கள் முற்றுகை

கோவை : புலியகுளம் அருகே உள்ள ஜெனிசிஸ் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு வாட்ஸ்அப் மூலம் மருத்துவர் சிகிச்சை கொடுத்ததால், பிறந்த குழந்தையின் உயிருக்கு ஆபத்தான சூழல் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை : புலியகுளம் அருகே உள்ள ஜெனிசிஸ் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு வாட்ஸ்அப் மூலம் மருத்துவர் சிகிச்சை கொடுத்ததால், பிறந்த குழந்தையின் உயிருக்கு ஆபத்தான சூழல் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 



ரத்தினபுரி அருகே வசித்து வருபவர் ரங்கராஜ் மற்றும் நித்யா தம்பதியினர். இவர் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தனது மனைவிக்கு ஜெனிசிஸ் மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், கடந்த 1-ந் தேதி பிரசவத்திற்காக சிகிச்சை அளிக்க அனுமதித்துள்ளனர். ஆனால், பிரசவத்திற்கான சிகிச்சை அளிக்கும் பொழுது மருத்துவர் சந்திரகலா இல்லாமல், உதவி மருத்துவர்கள் மட்டுமே இருந்துள்ளனர். மேலும், முதலில் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் பொழுது முதன்மை மருத்துவர் சந்திராவிற்கு வாட்ஸ்அப் மூலம் தகவல்களை புகைப்படங்களாக அனுப்பி, விவரங்களைக் கேட்டறிந்து சிகிச்சை அளித்துள்ளனர்.



பின்னர், குழந்தையின் உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டு விட்டது. இதையடுத்து, மருத்துவர்கள் அவர்களுக்கு சாதகமான தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றுவிட்டனர். இந்த நிலையில், தற்போது குழந்தையின் உயிருக்கு ஆபத்தான சூழல் உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால், அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் ஜெனிசிஸ் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...