மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி : மிஸ்டர் கோவையாக முகேஷ் என்பவர் தேர்வு

கோவை : மேட்டுப்பாளையத்தில் நடந்த மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் முகேஷ் என்பவர் மிஸ்டர் கோவையாக தேர்வு செய்யபட்டார்.

கோவை : மேட்டுப்பாளையத்தில் நடந்த மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் முகேஷ் என்பவர் மிஸ்டர் கோவையாக தேர்வு செய்யபட்டார்.

கோவை மாவட்ட அமச்சூர் பாடிபில்டர்ஸ் அசோசியேசன் மற்றும் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கோல்டு ஸ்டார் ஜிம் ஆகியவை இணைந்து மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியினை நடத்தியது. மேட்டுப்பளையத்தில் உள்ள சி.எஸ்.ஜ பள்ளி வளாக மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், கோவை மாவட்டம் முழுவதிலும் இருந்து 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்கள் கட்டுடலை வெளிபடுத்தினர்.



50 கிலோ மற்றும் 55 கிலோ எடை பிரிவு முதல் 85 கிலோ எடை பிரிவு வரை தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டியில் தங்கள் கட்டு உடல்களை இசைக்கு ஏற்றவாறு அழகுபடுத்தி மேடையில் வெளிபடுத்தியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இதில், 50 கிலோ எடை பிரிவில் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கோல்டு ஜீம் மாணவர் மணி என்பவர் முதல் பரிசினை பெற்றார். 55 கிலோ எடை பிரிவில் அதே ஜிம்மினை சேர்ந்த கனகு என்பவர் தட்டி சென்றார். இதனையடுத்து, ஒட்டுமொத்த ஓவரால் சாம்பியன்ஷிப் போட்டியில் கோவையை சேர்ந்த எம்.எஸ்.பி ஜிம் மாணவர் முகேஷ் வெற்றி பெற்று மிஸ்டர் கோவையாக தேர்ந்தெடுக்கபட்டார்.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், கேடயங்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியை ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டு கண்டு ரசித்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...