யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தாததால் ஆத்திரம் : மேட்டுப்பாளையம் அருகே வனத்துறை அதிகாரிகளை 5 மணிநேரம் சிறைபிடித்த விவசாயிகள்

கோவை : மேட்டுப்பாளையம் அருகே கடந்த 2 மாதங்களாக விளைநிலங்களை அட்டகாசம் செய்யும் யானையை வனத்துறை கட்டுப்படுத்த தவறியதாகக் கூறி, வனத்துறை அதிகாரிகளை 5 மணி நேரத்திற்கும் மேல் விவசாயிகள் சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை : மேட்டுப்பாளையம் அருகே கடந்த 2 மாதங்களாக விளைநிலங்களை அட்டகாசம் செய்யும் யானையை வனத்துறை கட்டுப்படுத்த தவறியதாகக் கூறி, வனத்துறை அதிகாரிகளை 5 மணி நேரத்திற்கும் மேல் விவசாயிகள் சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை மேற்கு பகுதியான வெள்ளியங்காடு, தோலம்பாளையம், சீளியூர், மேல்பாவி உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானைகள் நடமாட்டம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இங்கு முகாமிட்டுள்ள காட்டுயானைகள் இரவு நேரங்களில் இந்த பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் நுழைந்து வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்து வருகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் பல முறை வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கபடவில்லை என கூறப்படுகிறது. 



இந்த நிலையில், நேற்று இரவு தோலம்பாளையம் கிராமத்தில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் மீண்டும் காட்டுயானைகள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியது. இதனையடுத்து, யானையை விரட்ட காரமடை வனச்சரக அலுவலர் சரவணன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், வனத்துறை ஊழியர்கள் என பத்துக்கும் மேற்பட்டோர் சென்றுள்ளனர். அப்போது, ஆத்திரமடைந்த விவசாயிகள் கடந்த ஒரு மாதகாலமாக தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் இந்த காட்டு யானைகள் ஊடுருவல் குறித்து பல முறை புகார் அளித்தும், அதனை தடுக்க வனத்துறை தவறிவிட்டதாக குற்றம்சாட்டினர். மேலும், நள்ளிரவு வரை வனத்துறை அதிகாரிகளை வாகனங்களுடன் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வாகனங்கள் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்திய விவசாயிகள், தொடர்ந்து இரண்டு மாதமாக விவசாய பயிர்களை நாசம் செய்து வரும் காட்டு யானைகளை, கும்கியானைகளை கொண்டு விரட்ட வேண்டும் அல்லது மயக்க ஊசி செலுத்தி யானைகளை காடு கடத்த வேண்டும் என்றும், அதனை மாவட்ட வனத்துறை உயர் அதிகாரிகள் நேரில் வந்து உறுதி அளிக்க வேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

பின்னர், மாவட்ட வனத்துறை அதிகாரிகளிடம் பேசி நாளை மீண்டும் காட்டுயானைகள் நுழையாமல் இருக்க உறுதியான நடவடிக்கை எடுப்பதாக வனத்துறை அதிகாரிகள் அளித்த உறுதிமொழியை அடுத்து வனத்துறையினர் விடுவிக்கப்பட்டனர். தோலம்பாளையம் கிராமத்தில் நள்ளிரவில் வனத்துறை அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...