பச்சை தேயிலையின் ஜூன் மாதத்திற்கான மாதாந்திர குறைந்தபட்ச விலை அறிவிப்பு

நீலகிரி : நீலகிரியில் விளையும் பச்சை தேயிலைக்கு ஜூன் மாதத்திற்கான மாதாந்திர குறைந்தபட்ச விலையினை தென்னிந்திய தேயிலை வாரியம் அறிவித்துள்ளது.

நீலகிரி : நீலகிரியில் விளையும் பச்சை தேயிலைக்கு ஜூன் மாதத்திற்கான மாதாந்திர குறைந்தபட்ச விலையினை தென்னிந்திய தேயிலை வாரியம் அறிவித்துள்ளது.



இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் தேயிலை ஏலத்தின் அடிப்படையில் செய்யப்படுகிறது. இதன்படி, மே மாத ஏலத்தின் அடிப்படையில், ஜூன் மாதத்திற்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையாக கிலோவுக்கு, 15 ரூபாய் 43 பைசா விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தேயிலை வாரியத்தால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த பட்ச விலையினை விவசாயிகளுக்கு தேயிலை தொழிற்சாலைகள் வழங்குவதை அதிகாரிகள் கண்காணித்து, இந்த விலையை வழங்காத தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்கு குறித்த புகார்களை விவசாயிகள் தேயிலை வாரியத்திற்கு தெரிவிக்கலாம், இவ்வாறு, அதில் தேயிலை வாரியம் சார்பில் கூறப்பட்டுள்ளது.



கடந்த ஏப்ரல் மாதத்தில் 15 ரூபாய் 98 பைசாவும், மே மாதத்தில் 15 ரூபாய் 75 பைசாவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது 15 ரூபாய் 43 பைசாவாக விலை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...